Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, November 14, 2014

    நடத்தாத பாடத்திலிருந்து பிளஸ் 1க்கு கேள்வி; சொதப்பியது வினாத்தாள் குழு

    மதுரை மாவட்டத்தில் பிளஸ் 1 இரண்டாம் இடைத்தேர்வு வினாத்தாளில் குறிப்பிட்ட பாடங்களை தவிர பிற பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.

    காலாண்டு தேர்வுக்கு பின் நவ.,10ல் இரண்டாம் இடைத்தேர்வு துவங்கியது. இதில் பிளஸ் 1க்கு நடத்தாத பாடங்களில் இருந்தும் வினாக்கள் இடம்பெற்றன. குறிப்பாக தமிழ் முதல் தாளில் சீறாப்புராணம், குயில்பாட்டு, கலிங்கத்துபரணி ஆகிய பகுதிகளை தாண்டி 'பிள்ளைத்தமிழ்' பகுதியில் இருந்தும் வினாக்கள் இடம்பெற்றன.
    இயற்பியலில் ஐந்தாவது (திடவாயு பொருட்களில் இயந்திரவியல்) மற்றும் ஆறாவது (அலைவுகள்) பாடங்களில் மட்டும்தான் வினாக்கள் கேட்க வேண்டும். ஆனால், ஏழாவது பாடமான 'அலை இயக்கம்' பாடத்தில் இருந்தும் வினாக்கள் இடம்பெற்றன. இப்பாடம் இன்னும் ஆசிரியர்களால் நடத்தப்படவில்லை.
    நேற்று நடந்த கணக்குப்பதிவியியலிலும் ஏழாவது பாடம் ரொக்க ஏடு, எட்டாவது பாடம் சில்லரை ரொக்க ஏடு மற்றும் ஒன்பதாம் பாடம் வங்கி சரிக்கட்டும் பட்டியல் ஆகிய பாடங்களை தவிர முதல் ஒன்று முதல் ஆறாம் பாடங்களில் இருந்தும் தேவையின்றி வினாக்கள் இடம் பெற்றன. இதனால் மாணவர்கள் சிரமப்பட்டனர்.
    ஆசிரியர்கள் கூறுகையில், "இடைத்தேர்வு என்பது ஒரு குறிப்பிட்ட பாடங்களில் இருந்து மட்டும் வினாக்கள் கேட்கப்பட்டு மாணவர்களின் திறனை சோதிக்க வேண்டும். ஆனால் வினாத்தாள் குழு அனைத்து பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்டு குழப்பத்தை ஏற்படுத்தி சொதப்பியுள்ளது," என்றனர்.

    No comments: