Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, November 12, 2014

    10 இலட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

    ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்திய வங்கிகள் நிர்வாகத்துடன் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.


    இந்த வேலைநிறுத்தத்தில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், தேசிய வங்கி ஊழியர்கள் சங்கம் உள்பட 9 சங்கங்கள் பங்கேற்கின்றன.

    இதுதொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்களின் சங்கப் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:-

    ""வங்கி ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. தமிழகத்தில் 8400 வங்கிக் கிளைகளைச் சேர்ந்த 60 ஆயிரம் வங்கி ஊழியர்கள்-வங்கி அதிகாரிகள்-கிளை மேலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

    பண பரிவர்த்தனை இருக்காது: வேலைநிறுத்தம் காரணமாக வங்கிகள் செயல்படாது; மேலும் இணையதளம் மூலம் பண பரிவர்த்தனையும் நடைபெறாது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னையில் ஆர்ப்பாட்டம்: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் புதன்கிழமை காலை 10 மணிக்கு வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    டிசம்பர் 2-இல் வேலைநிறுத்தம்: வங்கி ஊழியர்களின் கோரிக்கையை வங்கி நிர்வாக அமைப்பு தொடர்ந்து ஏற்க மறுக்கும் நிலையில் தமிழகம்-புதுச்சேரி-கேரளம்-கர்நாடகம்-ஆந்திரம் (தெலங்கானா உள்பட) ஆகிய மாநிலங்களில் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வங்கி ஊழியர் வேலைநிறுத்தம் நடைபெறும். இதே போன்று மற்ற மாநிலங்களிலும் டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தத்துக்குத் திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார் சி.எச்.வெங்கடாசலம்.

    No comments: