பழநி அருகே ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 90 பேருக்கு ஆசிரியர் பணி கிடைத்துள்ளது. கடந்த 2013 ஆகஸ்ட் 18,19 ல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடந்தது.
இத்தேர்விற்காக, ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்றனர்.இதில் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தேர்ச்சி பட்டியல் ஆக., 10 ல் வெளியானது. அதில், ஆயக் குடியைச் சேர்ந்த 15 பேர் ஆசிரியர் பணிக்கு தேர்வாகியுள்ளனர். கொடைக்கானல், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 90 பேருக்கு ஆசிரியர் பணி கிடைத்துள்ளது.
2 comments:
Pls anyone update the center contact details
FREE COACHING FOR TET&TNPSC,PALAIYA AYAKKUDI,PALANI ROAD,DINDIGUL DT
Post a Comment