Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, August 26, 2014

    இ.பி.எப்., வட்டி இன்று முடிவாகிறது

    தொழிலாளர் சேமநல நிதியான, இ.பி.எப்.,க்கான வட்டி வீதம் குறித்து, இன்று முடிவு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர்களின் சேமநல நிதிக்கு, இந்த ஆண்டு (2014 15), 8.7 சதவீத வட்டி வழங்கலாம் என, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


    ஆனால், இந்த வட்டி வீதத்தை ஏற்க, தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தயாராக இல்லை. இந்நிலையில், இ.பி.எப்.,க்கான வட்டி வீதம் குறித்து, இன்று நடைபெறும் தொழிலாளர் சேமநல நிதி மத்திய அறக்கட்டளை வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில், வட்டி வீதம் குறித்து முடிவெடுப்பதை, நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டிற்கு தள்ளிப் போடலாம். கடந்த 2013 14ம் நிதியாண்டில், இ.பி.எப்., டிபாசிட்களுக்கு, 8.75 சதவீத வட்டியும், அதற்கு முந்தைய ஆண்டில், 8.5 சதவீத வட்டியும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    No comments: