Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, August 26, 2014

    TNPSC: 3 ஆயிரம் பேரை பணியமர்த்துவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்படும்.

    3 ஆயிரம் பேரை பணியமர்த்துவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் - அரசு பணியாளர் தேர்வு  ஆணையம் அறிவிப்பு. வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட 19 பதவிகளில் 1,064 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவுகள், 2 வார காலத்திற்குள் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.


    சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவர் திரு. சி. பாலசுப்பிரமணியன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-2 முதல் நிலை தேர்வு முடிவுகள், 2 வார காலத்திற்குள் வெளியிடப்படும் என்றும், 385 உதவி கால்நடை மருத்துவர் பணியிடங்கள் மற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3 ஆயிரம் பேரை பணியமர்த்துவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

    கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள், 2 மாதங்களில் வெளியிடப்படும் என்றும், 162 உரிமையியல் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, வரும் அக்டோபர் மாதம் 18,19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும், இன்று முதல், செப்டம்பர் மாதம் 21-ம் தேதி வரை ஆன்-லைன் மூலம் இதற்காக விண்ணப்பிக்கலாம் என்றும் டி.என்.பி.எஸ்.சி. பொறுப்புத் தலைவர் தெரிவித்துள்ளார்.

    No comments: