தற்போது வெளியிட்டுள்ள தாள்-2க்கான தேர்வு பட்டியலில் தேர்வானவர்களில்,நிறைய பேர் தாள்1 இல் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்வாக வாய்ப்புள்ளது. எனவே அவர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்களை நீக்கி தக்க மாற்றங்களுடன் இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படுமா?
இல்லை பட்டாதாரி ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி முடித்து விட்டு,தாள் 1 க்கான தேர்வு பட்டியல் வெளியிடப்படுமா?
மேலும் தற்போது இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்கள் சிலர் ஆசிரியர் தகுதிதேர்வு தாள்2 இல் வெற்றி பெற்றுள்ளனர். எனவே அவர்கள் பணியிடங்களையும் சேர்த்து காலிபணியிடங்கள் அறிவிப்பார்களா?அப்படி அறிவிக்கும் போது பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இது பற்றி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தொலை பேசி எண்களுக்குதொடர்பு கொண்டு கேட்டதற்க்கு, நீங்கள் முதல் தாளில் தேர்வுபெற்றுள்ளீர்களா இல்லைஇரண்டாம் தாளில் தேர்வு பெற்றுள்ளீர்களா என்றுஎங்களுக்கு எப்படி தெரியும் என்று அலட்சியமாக பதில் அளிக்கிறார்கள்.
அப்படியே ஒருவர் இரு தாள்களிலும் தேர்வு பெற்று இரண்டாம் தாளுக்குறியபட்டாதாரி ஆசிரியர் பணியிடத்தை முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்யும்போது அவருடைய பெயர் முதல் தாளுக்கான தேர்வு பட்டியலிலிருந்துநீக்கப்படுமா?
இல்லை அவர்களின் பெயர்கள் முதல் தாளுக்கான தேர்வு பட்டியலில் நீட்டிக்கப்படும் போது இடைநிலை ஆசிரிய பட்டய படிப்பு முடித்து, ஆசிரியர் தகுதிதேர்விலும் தேர்வு பெற்று காத்திருக்கும் எங்களை போன்றோரின் பணி வாய்ப்புபறிக்கப்படும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியலை வெளியிடும் முன்பு இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே இடை நிலைஆசிரிய பணிக்காக காத்திருக்கும் எங்களின் உரிமை காக்கப்படும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் இப்பிரச்சனையில் தலையிட்டு ஒரு நல்ல முடிவினை பெற்று தர வேண்டும்.
By காசிவிஸ்வநாதன்.
No comments:
Post a Comment