முதற்கட்ட கவுன்சிலிங்கில் நிரப்பப்படாத எம்.பி.பி.எஸ். மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் நாளை (7ம் தேதி) துவங்குகிறது.
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசுக்கு ஒதுக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் கடந்த மாதம் புதுச்சேரி பொறியியல் கல்லூரி சென்டாக் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவம், ஆயுர்வேதம் மற்றும் பி.எஸ்.சி. நர்சிங்., எம்.எல்.டி. உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு இடங்களுக்கான கவுன்சிலிங் நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு கோவா மாநில மாணவர்களுக்கும், அதைத்தொடர்ந்து சிறப்பு ஒதுக்கீடுகளான முன்னாள் ராணுவரின் வாரிசு, விடுதலைபோராட்ட வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர் பிரிவுகளுக்கான இடங்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. பகல் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பிற மாநில மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது.
காலியிடங்களுக்காக
முதற் கவுன்சிலிங்கில் நிரப்படாமல் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்களுக்கும், கால்நடை மருத்துவம், பி.எஸ்.சி. நர்சிங்., எம்.எல்.டி. உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கும் நாளை (7ம் தேதி) கவுன்சிலிங் துவங்குகிறது.
சென்டாக் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள காலி இடங்களுக்கு விருப்பப்பட்டால் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். முந்தைய கவுன்சிலிங்கில் பங்கேற்று மருத்துவம், துணை மருத்துவ படிப்புகளில் இடம் கிடைத்த மாணவ மாணவிகள் நாளை (7ம் தேதி) நடக்கும் கவுன்சிலிங்கில் பங்கேற்று தங்கள் முன்பு பெற்ற இடங்களை மாற்றம் செய்து கொள்ளலாம்.
7ம் தேதி 200 முதல் 165 வரை கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும், 8ம் தேதி 164.666 முதல் 141.666 வரை, 9ம் தேதி 141.333 முதல் 113 வரை, 10ம் தேதி 112.888 முதல் 80 வரை கட் ஆப் எடுத்த மாணவர்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment