Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, July 24, 2014

    போலிச் சான்றிதழ் கொடுத்த 1,137 ஆசிரியர்கள் நீக்கம்

    போலி கல்விச் சான்றிதழ், தகுதியற்ற ஆவணங்களைக் கொடுத்து பணியில் சேர்ந்த 1,137 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்து பிகார் அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக பிகார் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது, கல்வித்துறை அமைச்சர் பிரிஷன் படேல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.


    மேலும் அவர் பேசியது: ""தகுதியற்ற நபர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதில் 147 கிராமத் தலைவர்கள் மற்றும் 27 பஞ்சாயத்து ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீதான நடவடிக்கை தொடங்கி விட்டது. இது தொடர்பாக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன'' என்றார். முன்னதாக, நிதீஷ் குமார் ஆட்சியின்போது ரூ.3,000 ஆயிரம் தொகுப்பூதிய திட்டத்தின்கீழ் பள்ளிகளில் 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

    No comments: