Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, July 27, 2014

    15 பைசா டிக்கெட்டுக்கு பதில் 10 பைசா டிக்கெட்: 41 ஆண்டுகளாக வழக்கை சந்திக்கும் பஸ் கண்டக்டர்

    டெல்லி மாநகர போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்தவர் ரன்வீர்சிங். இவர் 1973–ம் ஆண்டு மாயாபுரி வழித்தடத்தில் செல்லும் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்தார். அப்போது வழியில் அந்த பஸ்சில் டிக்கெட் பரிசோதகர்கள் ஏறி பயணிகளிடம் இருந்த டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதித்தனர். அப்போது மாயாபுரி செல்லும் ஒரு பெண் பயணிக்கு 15 பைசா டிக்கெட்டுக்கு பதில் 10 பைசா டிக்கெட் கொடுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கண்டக்டர் ரன்வீர்சிங் மீது இலாகாபூர்வ விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் தவறு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரை கண்டக்டர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து டெல்லி போக்குவரத்து கழகம் 1976–ம் ஆண்டு உத்தரவிட்டது.
    இதை எதிர்த்து தொழிலாளர் கோர்ட்டில் கண்டக்டர் முறையீடு செய்தார். மனுவை விசாரித்த தொழிலாளர் கோர்ட்டு கண்டக்டரை டிஸ்மிஸ் செய்தது செல்லாது, அவருக்கு வழக்கு நடந்த காலத்துக்கான முழு சம்பளத்துடன் மீண்டும் பணி நியமனம் வழங்க வேண்டும், கண்டக்ரை டெல்லி போக்குவரத்து கழகம் டிஸ்மிஸ் செய்தது குற்றம் என்று கடந்த 1990–ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.
    இதை எதிர்த்து போக்குவரத்து கழகம் டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்தது. இதில் கண்டக்டர் அரசை ஏமாற்றி இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார். அவர் மீது கருணை காட்டக் கூடாது என்று மனுவில் கூறியது.
    ஆனால் ஐகோர்ட்டு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து 2008–ல் உத்தரவிட்டது. அப்போது ரன்வீர்சிங் பணிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றதால் அவருக்கு முழு ஓய்வூதியப் பணப்பலன் வழங்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது.
    இதையும் ஏற்றுக் கொள்ளாத போக்குவரத்து கழகம் நீதிபதி ஹீமாகோக்லி முன் ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. ஒரு அரசு ஊழியர் அரசை ஏமாற்றியதை அனுமதிக்க கூடாது என்றும் இதை அனுமதித்தால் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதை ஊக்குவிப்பதாக அமைந்து விடும் என்று போக்குவரத்து கழகம் சார்பில் தொடர்ந்து வாதாடப்பட்டு வருகிறது.
    டெல்லி போக்குவரத்து கழகத்தின் பிடிவாதத்தால் வழக்கு விசாரணை நீண்டு கொண்டே போகிறது. இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற ஆகஸ்டு மாதம் 12–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    1973–ல் தொடங்கிய வழக்கு விசாரணை 41 ஆண்டுகளாக நடைபெறுகிறது. கண்டக்டர் ரன்வீர் சிங்குக்கு தற்போது 70 வயதாகிறது. சம்பளமும் இல்லை. ஓய்வூதிய பலனும் இல்லை.

    No comments: