Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, July 25, 2014

    இட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி!

    நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள்.
    இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான இண்டர்வியூ நடக்க இருக்கிறது. இண்டர்வியூக்கு ஏற்கனவே நடந்த written exam அடிப்படையில் அழைக்கப்பட இருக்கின்றனர். மொத்த மார்க்குகள் 200. இண்டர்வியூக்கு அழைப்பதற்கு நிர்ணயம் செய்யப்பட்ட cut-off மார்க்குகள் இப்படி இருக்கிறது.
    SC/ST category - 112
    OBC category - 123
    General Category - 108
    இது நடக்கிற தேசம், இந்தியா.
    அந்த வங்கி, பாண்டியன் கிராம வங்கி.

    இண்டர்வியூ நடக்க இருக்கிற நாள், 3.5.2014.
    இட ஒதுக்கீடு குறித்தும், சமூக நீதி குறித்தும் மிகத் தீவீரமாக உரையாடும், இயங்கும் ஒரு தேசத்தில்தான் அப்பட்டமாக இப்படி மோசடி நடக்கிறது.
    இதுகுறித்த எந்தத் தகவலையும் வங்கியின் வெப்சைட்டில், வெளிப்படையாக அறிவிக்காமல், குறைந்த பட்சம் ஐந்து நாட்கள் அவகாசத்தில், சம்பந்தப்பட்ட candidateகளுக்கு மட்டும் தகவலைத் தெரிவித்து, அவசர அவசரமாக இண்டர்வியூ நடத்த பாண்டியன் கிராம வங்கி துணிகிறது.
    பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கத்தில் நான் பொதுச்செயலாளராக இருப்பதால், பல தோழர்கள் தாங்கள் வாங்கிய மார்க்குகள் குறித்தும், தாங்கள் சார்ந்திருக்கிற category குறித்தும் சொல்லவும்தான் இந்த குழப்பம் கவனத்திற்கு வந்தது. விசாரிக்க ஆரம்பித்த போது, இந்த மிகப் பெரும் மோசடி வெளிப்பட்டது.
    மொத்தம் 100 ஆபிஸர்களுக்கு இந்த பணிநியமனம் நடைபெறுகிறது. Govt.of Indiaவின் Reservation Policy பிரகாரம் இட ஒதுக்கீடு கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும்.
    SC - 15 %
    ST - 7.5%
    OBC 27.5 %
    General - 50%
    முதலில் SC/ST categoryஐ சேர்ந்தவர்களில், எத்தனை பேர் தேவைப்படுமோ, அதற்கேற்ப அவர்களுக்குள் ஒரு cut-off mark முடிவு செய்யப்படுகிறது.
    அடுத்ததாக OBC categoryஐ சேர்ந்தவர்களில், எத்தனை பேர் தேவைப்படுமோ, அதற்கேற்ப அவர்களுக்குள் ஒரு cut-off mark முடிவு செய்யப்படுகிறது.
    இறுதியாக இந்த இரண்டு categoryயிலும் இல்லாத General categoryயில் எத்தனை பேர் தேவைப்படுமோ, அதற்கேற்ப அவர்களுக்குள் ஒரு cut-off mark முடிவு செய்யப்படுகிறது.
    General categoryயில் அதிகமான பேர் தேர்ந்தெடுக்கப்படுவதால், அவர்களுக்குரிய cut-off marks இயல்பாக குறைவாகவும், மற்ற categoryயில் குறைவான பேர் தேர்ந்தெடுக்கப்படுவதால் அவர்களுக்குரிய cut-off marks அதிகமானதாகவும் இருக்கிறது.
    ஆனால், அந்தந்த categoryயில் தேவைப்படும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவர்.
    இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை.
    சட்டென்று மேலோட்டமாக பார்ப்பதற்கு இது சரியெனவும் தெரியும். ஆனால் உண்மை இதுவல்ல. இடஒதுக்கீட்டை தலைகீழாக வைத்திருக்கிறார்கள் பாண்டியன் கிராம வங்கியில்.
    இவர்கள் முதலில் தீர்மானித்திருக்க வேண்டியது General Categoryஐ! அதில் OBC categoryயில் உள்ளவர்களும் வருவார்கள், SC/ST categoryயில் உள்ளவர்களும் வருவார்கள். அதற்குத்தான் General Category என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் அனைவரையும் உள்ளடக்கி, எத்தனை பேர் தேவைப்படுகிறார்களோ அதற்கேற்ப cut-off mark முடிவு செய்ய வேண்டும்.
    இந்த General Categoryக்குத் தேவையான cut-off marks வாங்கிய OBC மற்றும் SC/ST categoryயைச் சேர்ந்தவர்கள் General categoryயாகவே கருதப்படுவர். இவர்கள் போக மீதமிருக்கிற OBC மற்றும் SC/ST categoryயைச் சேர்ந்தவர்களுக்குத்தான் அந்தந்த categoryக்குத் தேவையான எண்ணிக்கைக்கேற்ப cut-off marks முடிவு செய்யப்பட வேண்டும்.
    இப்படிச் செய்யும்போது, General categoryயின் cut-off marksஐ விட OBC மற்றும் SC/ST categoryக்குரிய cut-off marks ஒரு போதும் அதிகமாய் இருக்காது. இருக்க முடியாது. General categoryக்கு cut-off marks 108 என்றால், மற்ற OBCக்கும், SC/ST categoryக்கும் cut-off marks அதிகபட்சமாக 107.99 ஆகவாவது வரும். இதுதான் விஞ்ஞானபூர்வமான இடஒதுக்கீட்டு முறை.
    இங்கே அதையே உல்டா பண்ணி, இட ஒதுக்கீடு கொள்கைக்கு ஒரு பெரும் துரோகம் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. எவ்வளவு எளிதாகவும், வெளிப்படையாகவும் அவர்களால் ஏமாற்ற முடிகிறது.
    பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தின் பொறுப்பில் இருப்பவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த cut-off மார்க்குகளைப் பார்த்த மாத்திரத்தில் தெரியும் பாரபட்சங்கள் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் எல்லாம் சரியாகவே நடந்திருப்பதாக நிர்வாகத் தரப்பில் சொல்லப்பட்டது. பாண்டியன் கிராம வங்கியின் ஸ்பான்ஸர் வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. அதன் வழிகாட்டுதலின்படிதான், இந்த பணிநியமனம் நடைபெற்று வருவதாகச் சொல்லப்பட்டது. நாம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து, இதனை அம்பலப்படுத்தி இயக்கங்கள் நடத்த இருப்பதாகத் தெரிவித்திருக்கிறோம். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
    மற்ற சங்கங்கள், சகோதர அமைப்புகளை சந்தித்துப் பேசியபோது தெரிவிக்கப்பட்ட உண்மை இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. Indian banking personnel Selection (IBPS) வசம் வங்கிகளில் பணிநியமனங்கள் ஒப்படைக்கப்பட்ட பிறகு பல பொதுத்துறை வங்கிகளில், இப்படித்தான் நடந்து வருகிறது. அங்கு பெரும்பான்மையாக இருக்கிற சங்கங்கள் இதனைக் கண்டு கொள்வதில்லை. General categoryயிலிருந்து வருகிறவர்கள் தங்களிடம் உறுப்பினர்களாகச் சேர மாட்டார்கள் என பயந்து அமைதியாகிவிடுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
    ஆனால் நாங்கள், பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கமும், பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியனும் இதனை விடப் போவதில்லை. தீண்டாமை ஒழிப்பு முன்னணியோடு இணைந்து தொடர் போராட்டங்களுக்கு திட்டமிட்டு வருகிறோம்.
    இதற்கிடையில், இந்த அநியாயத்தைக் கேள்விப்பட்டு பாதிக்கப்பட்ட தோழர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.
    “ நான் SC. cut off marks 111 வாங்கியிருக்கிறேன். சார், இதுதான் எனக்கு கடைசி attempt" என்றார்.
    “நான் 114 மார்க்குகள். OBC சார். எனக்கு interviewக்கு லெட்டர் வரவில்லை. இதென்ன அநியாயம்?”
    “ நான் OBC. 119 மார்க்குகள் எடுத்திருக்கிறேன். ஆனால் எனக்கு இண்டர்வியூ கிடையாது. 108 மார்க்குகள் எடுத்த General categoryயை சேர்ந்த ஒருவர் இண்டர்வியூவுக்கு செல்லப் போகிறார். எதுக்கு சார் இந்த Reservation Ploicy? எல்லோரும் General category என்றால் கூட நான் வந்திருப்பேனே?”
    “108 மார்க்குகள் எடுத்திருக்கிறேன். ஆனா SC சார். எதாவது செய்யுங்கள் சார், ப்ளீஸ்”
    இந்தக் குரல்கள் ஒவ்வொன்றும் வேதனையும், வலியும் தருவதாக இருக்கின்றன. தங்கள் எதிர்காலத்திற்கான ஆதரவுக் கரங்களை தேடி நிற்கின்றன. இட ஒதுக்கீடு என்னும் மகத்தான சமூக நீதி அர்த்தமிழந்து போனதால் அவர்களது வாழ்க்கையும், நம்பிக்கைகளும் சிதைந்து போயிருக்கின்றன.
    வலிக்கிறது.

    2 comments:

    Anonymous said...

    Even this kind of stupidity happens in exams conducted in Madras atomic power station and IGCAR KALPAKKAM.

    Anonymous said...

    please avoid reservation , who is eligible person you give the chance. when india avoid reservation,and give importance to skill and knowledge that time developed.