Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, October 21, 2013

    விடுதிகளை கண்காணிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுரை

    விடுதியில் மாணவன் கொலை செய்யப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் விடுதிகளை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் மாணவன் கொலை நடந்த பள்ளியின் விடுதியை மூடுவதற்கு, முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டள்ளார்.

    திண்டுக்கல் ம.மு.,கோவிலூர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கியிருந்த ஆறாம் வகுப்பு மாணவன் ஹரிபிரசாத்தை, அதே விடுதியில் தங்கியிருந்த 10ம் வகுப்பு மாணவன் கொலை செய்தார். இதையடுத்து அந்த பள்ளியின் விடுதியை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்லில் மாணவன் கொலை செய்யப்பட்ட சம்வத்தையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி விடுதிகளை தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்கவும், மாணவர்களுக்குள்ள பிரச்னைகளை உடனடியாக தீர்க்கவும், விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லாத மாணவ, மாணவிகளை பெற்றோருடன் அனுப்பி வைக்க வேண்டும்.

    1 comment:

    Unknown said...

    ஆட்சிபீடம் மற்றும் அதிகார மையத்தில் அமர்ந்திருப்பவர்கள், கல்வியாளர்கள் மற்றும் உலவியல் நிபுணர்கள் சற்றே சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. மாணவர்களை முன்புபோல கண்டித்து / தண்டித்து வளர்த்தாலொழிய இந்த நிலைமை மாறாது. இதுபோன்ற குற்றச்செயல்கள் பெருமளவில் தொடரத்தான் செய்யும்.