Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, October 31, 2013

    ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி: டி.ஆர்.பி., தலைவருக்கு அபராதம்

    ஆசிரியர் தகுதித்தேர்வு, கீ ஆன்சரில் தவறான விடைகள் அளிக்கப்பட்டுள்ளதால், முழு மதிப்பெண் வழங்க தாக்கலான வழக்கில் அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யாததால், டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யாருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

    விக்கிரமசிங்கபுரம் சூர்யா தாக்கல் செய்த மனு: எம்.எஸ்.சி., - பி.எட்., படித்துள்ளேன். டி.ஆர்.பி., மூலம், 2012ல் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் எனக்கு பி வரிசை வினாத்தாள் வினியோகித்தனர். டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியான கீ ஆன்சரில், ஒன்பது கேள்விகளுக்கு, தவறான விடைகள் இடம்பெற்றன.

    அவற்றிற்கு நான், சரியான விடைகளை எழுதியுள்ளேன். எனக்கு 86 மதிப்பெண் வழங்கியுள்ளனர். தேர்ச்சி பெற 90 மதிப்பெண் வேண்டும். கீ ஆன்சர் தவறாக உள்ளதால் எனக்கு கூடுதலாக ஒன்பது மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இதனால் என், கட்-ஆப் மதிப்பெண் உயரும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார்.

    நீதிபதி எஸ்.நாகமுத்து முன் மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இவ்வழக்கு ஓராண்டாக நிலுவையில் உள்ளது. பலமுறை விசாரணைக்கு வந்தும் டி.ஆர்.பி., தலைவர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. அரசுத் தரப்பிற்கு, கால அவகாசம் அளித்தும் நடவடிக்கை இல்லை.

    இதனால், மனுதாரர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். டி.ஆர்.பி., தலைவருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன். அவர் தொகையை மனுதாரருக்கு வழங்க வேண்டும். விசாரணை நவ., 11க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

    1 comment:

    Anonymous said...

    trb staff ellaraiyum maatranum new staff podanum