Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, October 25, 2013

    கல்விக் கடனுக்கு லஞ்சம் கேட்ட வங்கி மேலாளருக்கு சிறை

    கல்விக்கடன் வழங்க வேண்டுமானால் தனக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என அடம்பிடித்த சென்ட்ரல் பாங்க்., மேலாளர் ஒருவர் சி.பி.ஐ., போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இது தொடர்பான விவரம் வருமாறு: தேனி மாவட்டம் அம்மச்சியாபுரத்தை சேர்ந்தவர் பாலுச்சாமி. இவரது மகள் நர்சிங் படிப்பதற்கென வங்கியில் லோன் கேட்டு விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தினார் மேலாளர் முத்துக்குமார்.

    இதற்கிடையில் கடன் கிடைக்க வேண்டுமானால் ரூ.15 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்றார். பேரம் பேசி ரூ.7 ஆயிரம் ஆனது. இதற்கு சம்மதித்த பாலுச்சாமி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். இந்த புகாரை சி.பி.ஐ.,க்கு பரிந்துரை செய்தனர்.

    இதனையடுத்து பாலுச்சாமி பணத்தை ரத்னாநகரில் உள்ள மேலாளர் வீட்டு அருகே கொண்டு கொடுக்க சென்றபோது, மறைந்திருந்த சி.பி.ஐ.,போலீசார் கையும் களவுமாக பாங்க் மேலாளர் முத்துக்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் முத்துக்குமார் அடைக்கப்பட்டார்.

    No comments: