Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, October 25, 2013

    ஆவணங்களை பாதுகாக்க நடவடிக்கை: உயர்கல்வி அமைச்சர் தகவல்

    "தமிழ்நாடு அரசு ஆவண காப்பகங்களில், ஆவணங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது" என உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.


    சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது சமத்துவ மக்கள் கட்சி எம்.எல்.ஏ., சரத்குமார், "தமிழ்நாட்டில், ஆவணக் காப்பகங்களில், நவீன தொழில் நுட்பம் மூலம் ஆவணங்களை பாதுகாக்கும் செயல்குறிப்பு அரசிடம் உள்ளதா?" எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு, உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பதில் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ள ஆவணங்களை பாதுகாப்பதற்காக, அவற்றை ஸ்கேனிங் மற்றும் நுண் படங்களாக்கும் பணி படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது. ஏனைய ஆவணங்களையும், கம்ப்யூட்டர் மயமாக்குதல் மற்றும் நுண் புகைப்படம் எடுத்தல் பணி மேற்கொள்ள, 2012 -13ல், பகுதி இரண்டு திட்டம் மூலம் 12 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    சென்னை எழும்பூரில், அரசு ஆவண காப்பகம் உள்ளது. அதேபோல், திருச்சி, கடலூர், சேலம் உட்பட ஐந்து மாவட்டத் தலைநகரில் ஆவண காப்பகம் உள்ளது. இங்குள்ள ஆவணங்களை பாதுகாக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்காக கடந்த ஆண்டு 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அமைச்சர் பேசினார்.

    அதைத் தொடர்ந்து, சரத்குமார் பேசும்போது, "ஆவணங்களை உரிய முறையில் பாதுகாத்து, வருங்கால சந்ததியினருக்கு வழங்க வேண்டியது அவசியம். ஆவணங்களை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு நன்றி. திருநெல்வேலியில் ஆவண காப்பகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். கோரிக்கையை பரிசீலிப்பதாக, அமைச்சர் தெரிவித்தார்.

    No comments: