Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, October 30, 2013

    கல்வி அதிகாரியை கண்டித்து போராட்டம்: கணவன், மனைவி உள்பட ஏழு பேர் கைது

    நெல்லை மாவட்ட பெண் அதிகாரியை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த ஆசிரியர் குடும்பத்தினர் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே ஏர்வாடியில் உள்ள தனியார் துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக இருந்தவர் யுனைசிகிரேனா. அந்த பள்ளியின் நிர்வாகம் மாற்றப்பட்டதால், நிர்வாகியின் மனைவியை தலைமையாசிரியையாக பணிநியமனம் செய்வதற்காக இவரை பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
    இவருக்கு உடந்தையாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பெண் அலுவலர் செயல்பட்டாராம். எனவே பெண்அதிகாரியை கண்டித்து நேற்றும், இன்றும் நெல்லை, மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பாக ஆசிரியை யுனைசி கிரேனா, அவரது கணவர் கிப்சன், ஏழு வயது மகன் கிரேசியஸ் ஆலிவ் மற்றும் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க மாநில தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே போலீசார் அவர்களை கைது செய்து ஜங்ஷன் ஸ்டேஷன் அழைத்துச்சென்றனர். பின்னர் மாலையில் விடுவித்தனர்.

    No comments: