Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, October 26, 2013

    பண்டிகை முன்பணம் வழங்க மறுப்பு தமிழக முதல்வர் தலையிட அரசு ஊழியர் சங்கம் வேண்டுகோள்

    தமிழக அரசு ஊழியர் களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படுமென தமிழக முதல்வர் கடந்த ஆண்டு தெரிவித்தார்.


    அதனடிப்படையில் பல பண்டிகை களுக்கு ஏற்கனவே ரூ.5 ஆயிரம் முன்பணம் வழங்கப் பட்டுள்ளது.ஆனால் தற்போது போதுமான பணம் ஒதுக்கீடு இல்லை எனக் காரணம் கூறி கருவூலங்களில் பல துறை அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் வழங்க மறுத்து வருகின்றனர். இதுதொடர்பாக அரசுத்துறைகளின் தலைமை அலுவலர்களை தொடர்பு கொண்டால் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை எனதெரிவித்து வருகின்றனர். இத னால் அரசு ஊழியர்கள் மிகுந்த அதிருப்தியும், வேதனையும் அடைந்துள்ளனர். முன்பணத்திற்கு போதுமான நிதி வழங்க வேண்டியது அரசின் கடமை என்பதை வலியுறுத்துகிறோம்.

    எனவே, தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலைமையில் தமிழக முதல்வர் தலையிட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் முன்பணம் வழங்கிட ஆவன செய்து உதவுமாறு கேட்டுக் கொள் கிறோம்.மேற்கண்டவாறு சங் கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வி, பொதுச்செயலாளர் இரா.பால சுப்பிரமணியன் ஆகியோர் அறிக்கை ஒன்றில் கூறியுள் ளனர்.

    No comments: