Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, October 25, 2013

    பத்துக்கும் குறைவாக மாணவர்: பள்ளிகளை மூட உத்தரவு : கேரள அரசு அதிரடி

    கேரளாவில், 10க்கும் குறைவான மாணவர்களை உடைய, அரசு பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருவதால், அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. அதனால், மாநிலத்தில் குழந்தைகள் இல்லா பள்ளிகளை மூட, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 12 பள்ளிகள் மூடப்பட்டன.

    கல்வி அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 143 பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்களே இருப்பது தெரியவந்தது. உடன், இப்பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொச்சு வேளி ரயில் நிலையம் அருகேயுள்ள, ஜி.எல்.பி., பள்ளி இந்த கல்வியாண்டு முதல் மூடப்பட்டது. இங்கு பயின்ற மாணவர்கள், நான்கு ஆசிரியர்கள் அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, வேறு சில பள்ளிகளும் மூடப்பட்டன. மீதி பள்ளிகளை மூடுவது தொடர்பாக, வரும், 28ம் தேதி நடைபெறும் , மாநில கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.

    No comments: