Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, October 14, 2013

    தன்னாட்சி கல்வி நிறுவனங்களுக்கு பட்டம் வழங்கும் அதிகாரம் சரியா?

    தகுதியுள்ள தன்னாட்சி கல்லூரிகளுக்கு, தாங்களே மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் அதிகாரம் வழங்குவது குறித்த முடிவு வரவேற்பையும், எச்சரிக்கையையும் பெற்றுள்ளது.

    நேர்மறை கருத்துக்கள்

    இந்த புதிய திட்டம் கவனமாகவும், சிறப்பாகவும் அமல்படுத்தப்பட்டால், உயர்கல்வி நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட்டு, தங்களுக்கான பாடங்களையும், பாடத்திட்டங்களையும் சிறப்பாக தயாரிக்க முடியும். மேலும், தேர்வுகளை முறையாக நடத்தி, ஆராய்ச்சி நடவடிக்கைகளையும் நன்றாக மேற்கொள்ள முடியும்.

    உயர்கல்வித்துறையை வலுப்படுத்தும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட இந்த முடிவால், உயர்கல்வி நிறுவனங்கள், சுதந்திரமாகவும், படைப்பாக்கத் திறனுடனும் முடிவுகளை மேற்கொள்ள முடியும். இதன்மூலம், ஆராய்ச்சி நடவடிக்கைகள் அதிகரிக்கும். மேலும், தங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசிடமிருந்து தடையின்றி பெறுவதற்கு வழியேற்படும்.

    இதற்கான ஆலோசனைகள் முந்தைய ஆண்டுகளில் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தவைதான். இப்போதுதான் அது அமலாகும் நிலைக்கு வந்துள்ளது.


    எதிர்மறை கருத்துக்கள்

    பல சுயாட்சி மற்றும் தனியார் நிகர்நிலைப் பல்கலைகள் இன்றைக்கு நியாயமான முறையில் செயல்படுவதில்லை. அவை, ஊழல் மலிந்ததாகவும், ஒரு வணிக நிறுவனம் போலவும் செயல்படுகின்றன.

    வருமானம் என்ற ஒற்றை நோக்கத்தை மட்டுமே கொண்டு, பல உயர்கல்வி நிறுவனங்கள் பண முதலைகளால் தொடங்கப்படுகின்றன. எனவே, இந்த புதிய செயல்திட்டம், மிகவும் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்புடன் செயல்படுத்தப்படவில்லை என்றால், இந்திய உயர்கல்வி மேலும் சீரழிந்து சின்னாபின்னமாகிவிடும்.

    இவ்வாறு பல நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்கள் இதுதொடர்பாக, கல்வியாளர்கள் மத்தியில் நிலவுகின்றன.

    மத்திய மனிதவள அமைச்சகத்தின் முடிவில் இருக்கும் இந்த புதிய செயல்திட்டம், நடைமுறைக்கு வரவேண்டுமெனில், அதற்கு சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    No comments: