Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, October 14, 2013

    சிறப்பு அனுமதி: குழந்தைகளை இன்று பள்ளியில் சேர்க்கலாம்

    இன்று விஜயதசமி வழிபாடு என்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க அனுமதிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கான இலவச கல்வி மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி, குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளில், குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் அங்கன்வாடி மையங்களில் பராமரிக்கப்படுகிறது.

    அதைத் தொடர்ந்து, ஐந்து வயது பூர்த்தியானால் அருகில் உள்ள துவக்கப்பள்ளியில் அந்த குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க, அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் தேதியில் இருந்து செப்டம்பர் 30ம் தேதி வரை ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம்.

    ஆனால், முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, குழந்தைகளின் வயதுக்கேற்ற வகுப்புகளில் சேர்க்க அனைவருக்கும் கல்வித் திட்டம் அனுமதிக்கிறது. குறிப்பாக ஐந்து வயது பூர்த்தியானால், முதல் வகுப்பில் சேர்க்கலாம் என குறிப்பிடப்படுகிறது.

    இந்நிலையில், நேற்று, ஆயுதபூஜை வழிபாட்டை தொடர்ந்து, இன்று (அக்., 14ம் தேதி) விஜயதசமி (சரஸ்வதி வழிபாடு) என்பதால் ஐந்து வயதான குழந்தைகளை முதல் வகுப்பிலும், மூன்று வயது முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் அங்கன்வாடி மையத்தில் சேர்க்கலாம்.

    கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: "குழந்தைகளின் இடை நிற்றலை தவிர்க்க ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். இன்று விஜயதசமி என்பதால், ஐந்து வயது பூர்த்தியான குழந்தைகளை அரசு துவக்கப்பள்ளியில் சேர்க்க அனுமதிக்கப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.

    No comments: