"டீம் லீஸ் சர்வீசஸ்" நிறுவனத்தின் வேலைவாய்ப்பு மற்றும் வணிக ஆய்வறிக்கையானது அக்டோபர் 2013 முதல் மார்ச் 2014 வரையிலான இரண்டாம் அரை வருடத்துக்கான தொழில்துறை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆறு மாதங்களில் எந்தத் துறையில் பணியாளர்கள் அதிகம் நியமிக்க வாய்ப்பிருக்கிறது? தொழில் துறையின் வளர்ச்சி எப்படி இருக்கும்? என்பது குறித்து இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மனிதவளம், நிர்வாகம், உடலுழைப்பை கொடுக்கும் வேலைகள் மற்றும் பிற வேலைகள் மாற்றங்கள் எதுவும் பெரிய அளவில் இல்லாமல் ஒரு சதவிகித அளவில் மட்டும் மாற்றங்கள் இருக்கும் என கருதப்படுகிறது.
விற்பனை, மார்க்கெட்டிங், நுகர்வோர் துறையில் இரண்டு சதவிகித வளர்ச்சி இருக்கும் எனவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆளெடுப்பு மூன்று சதவிகிதம் குறைந்து காணப்படும் எனவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், பொறியியல் துறையைப் பொறுத்தவரை மற்ற துறைகள் அனைத்தையும் விட 5 சதவிகித வளர்ச்சி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அது தவிர, மேற்கண்ட வளர்ச்சிகள் அனைத்தும் அனுபவம் வாய்ந்த பணியாளர்களுக்குத் தான் வாய்ப்புகள் உதவும் வகையில் இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
No comments:
Post a Comment