Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, October 15, 2013

    எம்.பி.பி.எஸ்., படிப்பில் கூடுதலாக 410 பேர் சேர்ப்பு: மருத்துவ கல்வி இயக்ககம் தகவல்

    "அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, கடந்த ஆண்டை விட, 410 மாணவர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்" என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


    தமிழகத்தில், கடந்த ஆண்டில், 18 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. இதில், 2,145 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு மாணவர் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டில், கூடுதலாக, 310 இடங்களை அதிகரித்து, இந்திய மருத்துவக் கழகம் அனுமதி அளித்தது. இதன்படி, சென்னை மருத்துவக் கல்லூரி 85; ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி 100; அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி 25; தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி50 மற்றும் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி 50, இடங்கள் என, ஐந்து கல்லூரிகளில், 310 இடங்கள் கூடுலாக கிடைத்தன.

    இதுதவிர, திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கவும், 100 இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தது. இதன் மூலம் கடந்த ஆண்டைவிட, 410 எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குனர் கனகசபை கூறுகையில், "மொத்தமுள்ள, 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 2,555 பேரும்; 13 தனியார் மருத்துவக் கல்லூரிகளில், 1,560 பேர் என, மொத்தம், 4,115 பேர், தமிழகத்தில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., படிப்பைத் தொடங்கியுள்ளனர்" என்றார்.

    No comments: