Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, October 10, 2013

    கல்வியில் பின்தங்கிய எட்டு மாவட்டங்களை சேர்ந்த, 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச "நோட்ஸ்' வழங்க,'' அரசு உத்தரவிட்டுள்ளது

    தமிழக அளவில்,10,பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகளில், பின்தங்கிய மாணவர்களை ஊக்கப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க,அரசு உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திண்டுக்கல், சிவகங்கை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்டங்களை, சேர்ந்த மாணவர்கள் கல்வியில் பின்தங்கியிருப்பதாக, அரசுக்கு தகவல் சென்றது. 

    இலவச "நோட்ஸ்': 
    இதையடுத்து, பிற்பட்டோர் நலத்துறை மூலம், அரசு,உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், பிற்பட்ட, மிக பிற்பட்ட, சீர்மரபினர் பிரிவை சேர்ந்த 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவசமாக "நோட்ஸ்'கள் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. பிற்பட்டோர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"
    " கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, மாணவர்களுக்கு, இலவசமாக "நோட்ஸ்' வழங்கப்பட உள்ளது. இதற்காக, மாணவர்கள் பட்டியலை, முதன்மை கல்வி அலுவலகம் மூலம் சேகரிக்கிறோம். மாணவர்கள் பட்டியல் சென்றபின், அரசு உடனே, இலவச "நோட்ஸ்களை' வழங்கும். அரசு தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் விதத்தில், நவம்பர் 15க்குள் நோட்ஸ்கள் வழங்கப்படும்,'' என்றார்

    No comments: