Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, September 7, 2013

    இணையதளத்தில் காலியிட விபரம் வெளியிட வேண்டும்

    மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி காலியிட விபரங்களை, இணைய தளத்தில் வெளியிடவேண்டும் என, மாணவர் மற்றும் பெற்றோர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து நலச்சங்கத் தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரியில் கடந்த மாதம் 78 மருத்துவ இடங்களுக்கு 2ம் கட்ட சென்டாக் கவுன்சிலிங் நடந்தது. அதன் பிறகும் இடங்கள் காலி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த காலியிடங்கள் மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்து கொள்ளும் வகையில் இதுவரை சென்டாக் இணையதளத்தில் வெளி யிடப்படவில்லை.

    அரசு கல்லூரியில் வெளிமாநில இட ஒதுக்கீடாக ஒதுக்கப்பட்ட 23 இடங்களில், 6 இடம் காலியாக உள்ளவை ஆகும். இது சம்பந்தமாக வழக்கு சுப்ரிம் கோர்ட்டில் உள்ளது. இவ்வழக்கு வரும் 10ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்த விசாரணையின்போது 6 இடங்களை நிரப்பிக்கொள்ள புதுச்சேரி அரசுக்கு அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது. மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை வரும் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

    எனவே, மருத்துவம், துணை மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர துணை கலந்தாய்வை விரைவில் நடத்த வேண்டும். இதற்கான அனுமதியை புதுச்சேரி பல்கலைக்கழகத்திடம் இருந்து காலத்தோடு பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியிடங்களை சென்டாக் இணைய தளத்தில் வெளியிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    No comments: