Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, September 30, 2013

    தகுதி, பணி மூப்பு இருந்தும் பதவி உயர்வுக்காக ஆசிரியர்கள் தவிப்பு

    போதிய தகுதி, பணி மூப்பு இருந்தும் பதவி உயர்வு,தேர்வு புறக்கணிப்பு, பணப்பலனின்றி 6,875 ஆசிரியர்கள் தவிக்கின்றனர். தமிழகத்தில், கடந்த 2003-04 கல்வி ஆண்டில் டி.ஆர்.பி., மூலம், தொகுப்பூதிய அடிப்படையில், பட்டதாரி 5,377 முதுநிலை பட்டதாரி 1,498 உட்பட இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
    2006 ஜூனில் பணி நிரந்தரமாகினர். தொகுப்பூதியத்தில், இருந்த 2 ஆண்டுகளை "சர்வீஸ் ' பட்டியலில் சேர்க்காமல், 10 ஆண்டுகள் பணி முடிக்கவில்லை என்ற காரணத்தை கூறி, தேர்வுநிலை (செலக்ஷன் கிரேடு) பதவி உயர்வு வழங்க மறுக்கின்றனர். இதனால், தேர்வு கண்காணிப்பாளர், துறை அலுவலர் பணிகள் வழங்காமல் புறக்கணிக்கப்படுவதாக, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 
    பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி சூசை கூறுகையில்,"" 2005-06ல் இடைநிலை ஆசிரியராகி, பதவி உயர்வு மூலம் முன்னிலையில் உள்ளனர். உரிய தகுதி, பணி மூப்பு இருந்தும், 2ஆண்டுகள் தொகுப்பூதிய காலத்தை அரசு சேர்க்காமல் விட்டதால், பதவி உயர்வு கேள்விகுறியானது. பங்களிப்பு பென்ஷனிலும், பாதிக்கப்பட்டு, பதவி உயர்வு, பணப்பலன்களை இழந்து வருகிறோம்,'' என்றார்.

    No comments: