Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, September 26, 2013

    டிஇடி தேர்வு விவகாரம் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து பட்டதாரிகள் மேல்முறையீடு

    இதுகுறித்து தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் ரத்தினகுமார் கூறியதாவது: ஆசிரியர் பணிக்கு தகுதியான பி.எட் முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த 30 ஆயிரம் பட்டதாரிகளுக்கு கடந்த 2010&ம் ஆண்டு மே மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் சான்று சரிபார்ப்பு செய்தது. அதில் 22 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
    மீதம் உள்ள 8 ஆயிரம் பேருக்கு பணி கிடைக்கவில்லை. இதற்கிடையே ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த அரசு அறிவித்தது. சான்று சரிபார்ப்பு முடித்த 8 ஆயிரம் பேரில் 95 பேர் தங்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த ஜூலை 9-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. சான்று சரிபார்ப்பு முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்தும், இனிவரும் பணியிடங்களில் இவர்களை நேரடி பணி நியமனம் செய்யலாம் என்றும் நீதிபதிகள் எலிபி தர்மராவ், வேணுகோபால் ஆகியோர் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை பின்பற்றி மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி மணிக்குமார், கடந்த வாரம்
    75 பேருக்கு பணி நியமனம் வழங்கலாம் என தீர்ப்பளித்தார். இதையடுத்து, மேலும் 700 பட்டதாரிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் நாங்களும் மேற்கண்ட தேதியில் சான்று சரிபார்ப்பு முடித்துள்ளோம்.
    எங்களுக்கும் தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று கேட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன்,  பட்டதாரிகள் ஆசிரியர் தகுதி தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்று கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து நாங்கள் விரைவில் மேல்முறையீடு செய்வோம்.இவ்வாறு ரத்தினகுமார் கூறினார்.

    No comments: