Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, September 29, 2013

    ஆதரவற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஆசிரியர்கள்

    ஓமலூர் பகுதியில் பொருளாதார ரீதியாக ஆதரவற்ற நிலையில் காணப்படும் மாணவ-மாணவிகளைக் கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முன்மாதிரி முயற்சியை தொடங்கியுள்ளனர்.

    ஓமலூர் பகுதியில் பொருளாதார ரீதியாக ஆதரவற்ற நிலையில் காணப்படும் மாணவ-மாணவிகளைக் கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முன்மாதிரி முயற்சியை தொடங்கியுள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் 1,111 தொடக்கப் பள்ளிகளும், 382 நடுநிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாரத்தில் உள்ள 33 ஊராட்சிகளில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக ஆசிரியர்கள் முன்மாதிரி முயற்சியை மேற்கொண்டுள்ளனர். தன்னார்வமிக்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து சரபங்கா அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளனர்.

    இந்த அமைப்பின் மூலம், ஓமலூர் வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளில், சிறந்த மதிப்பெண்களை எடுத்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம், நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம் வீதம், 33 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

    அரசு வழங்கும் ஊதியத்தை, ஆக்கப்பூர்வமான முறையில் செலவிட்டு, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஆசிரியர்களின் முயற்சி பாராட்டத்தகஎன்று பொதுமக்கள தெரிவித்தனர்

    1 comment:

    Anonymous said...

    Paaratukal