Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, September 26, 2013

    பிளஸ்-2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் 2015-2016-ல் அமல்படுத்த வாய்ப்பு

    பிளஸ்-2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் தயாராக உள்ளது. இந்த பாடத்திட்டம் 2015-2016-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது.புதிய பாடத்திட்டம் தமிழக அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறை அப்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
    தற்போது நடைமுறையில் உள்ள பிளஸ்-2 பாடத்திட்டம் தயாரித்து 6 வருடங்கள் ஆகிவிட்டன. எனவே புதிய பாடத்திட்டம் தயாரிக்க ஒவ்வொரு பாடத்திற்கும் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தனித்தனி குழுவினர்கள் அந்த பாடத்திட்டத்தை தயாரித்தனர்.
    பின்னர் அந்த பாடத்திட்டம் கல்வியாளர்கள், பொதுமக்கள் கருத்துக்களை அறிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏராளமானவர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஏற்கக்கூடிய கருத்துக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
    இறுதிசெய்யும் கூட்டம்
    பாடத்திட்டம் இறுதி செய்வதற்கான கூட்டம் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு பின்னர் பாடத்திட்டம் அடிப்படையில் பாடப்புத்தகங்கள் எழுதப்படவேண்டும். இந்த பாடப்புத்தகங்கள் எழுதி முடித்து பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படவேண்டும். எனவே வருகிற கல்வி ஆண்டில் இந்த பாடப்புத்தகங்கள் அமல்படுத்தப்படாது.
    இந்த பாடப்புத்தகங்கள் அனைத்தும் 2015-2016-ம் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த தகவலை பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    No comments: