Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, September 26, 2013

    மாணவர்களுக்கான கேரம் போட்டி பங்கேற்க பள்ளிகளுக்கு அழைப்பு

    ஒன்று முதல் ப்ளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளது.
    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், ஈரோடு மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள், ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டு அரங்கில் வரும், நான்காம் தேதி காலை, 8.30 மணிக்கு நடக்கிறது.இளநிலை பிரிவில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள், ஆறு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரை பயில்வோர், முதுநிலை பிரிவில் பங்கேற்கலாம். இளநிலை பிரிவில் ஒற்றையர் போட்டியில் முதலிடத்துக்கு, ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடத்துக்கு, 500, மூன்றாமிடத்துக்கு, 250 ரூபாய் வழங்கப்படும்.இரட்டையர் பிரிவில், முதலிடத்துக்கு, 2,000 ரூபாய், இரண்டாம் இடத்துக்கு, 1,000, மூன்றாமிடம் பெறுபவருக்கு, 500 ரூபாயும் வழங்கப்படும். முதுநிலை ஒற்றையர் பிரிவில், முதலிடத்துக்கு இரண்டாயிரம், இரண்டாமிடத்துக்கு, ஆயிரம், மூன்றாமிடம் பெறுபவருக்கு, 500 ரூபாய் வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் முதலிடத்துக்கு, நான்காயிரம், இரண்டாமிடம் இரண்டாயிரம், மூன்றாமிடம் பெறுபவருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.முதுநிலை பிரிவில், ஒற்றையர் பிரிவில், ஒரு பள்ளியில் இருந்து, இரண்டு வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். இரட்டையர் பிரிவில், பள்ளி ஒரு குழுவை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இளநிலை ஒற்றையர் பிரிவில் ஒரு பள்ளிக்கு, இரண்டு வீரர்களும், இரட்டையர் பிரிவில் பள்ளி ஒரு குழுவை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஒரு போட்டியில் ஒரு வீரர் மட்டும் கலந்து கொள்ள முடியும்.பள்ளி தலைமை ஆசிரியர், முதல்வர்களிடம் இருந்து வயது சான்றிதழ்களை பெற்று வர வேண்டும், என்று மாவட்ட விளையாட்டு அலுவலர் கனகராஜ் கேட்டு கொண்டுள்ளார்.

    No comments: