Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, September 24, 2013

    தொழிற்­ப­யிற்சி பள்­ளி­களில் ஆசி­ரியர் பற்­றாக்­குறை: மாண­வர்கள் தவிப்பு

    அரசு தொழிற்­ப­யிற்சி பள்­ளி­ களில், ஏரா­ள­மான ஆசி­ரியர் பணி­யி­டங்கள் காலி­யாக உள்­ளதால், மாண­வர்­களின் தொழிற்­ப­யிற்சி திறன் கேள்வி குறி­யாகி உள்­ளது.

    தமி­ழ­கத்தில், 62 தொழிற்­பயிற்சி பள்­ளி­களை அரசு அமைத்­துள்­ளது. இவை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்­சித்­துறை கட்­டுப்­பாட்டில், இயங்கி வரு­கின்­றன. இதில், பிட்டர், வெல்டர், பொருத்­துனர், மோட்டார் மெக்­கானிக், டெய்­லரிங் பயிற்சி, "ஏசி" மெக் கானிக் உள்­ளிட்ட தொழிற் பாடப் ­பி­ரி­வு­களில் பயிற்சி அளிக்­கப்­ப­டு­கி­றது.

    காஞ்­சி­புரம் மாவட்­டத்தில், செங்­கல்­பட்டு பகு­தியில் அரசு தொழிற்­ப­யிற்சி பள்ளி செயல்­பட்டு வரு­கி­றது. இதில், ஆண்டு தோறும் வகுப்­பிற்கு, 50 மாண­வர்கள் என, மாணவர் சேர்க்கை நடை­பெ­று­கி­றது. தமி­ழகம் முழு­வதும், ஆண்­டு­தோறும் 31 ஆயிரம் பேர் தொழிற்­ப­யிற்சி பெறு­கின்­றனர்.

    5 புதிய பள்­ளிகள் ஒவ்­வொரு பாடப்­பி­ரி­விற்கும், ஒரு ஆசி­ரியர் என, ஒவ்­வொரு மையத்­திலும், 10க்கும் மேற்­பட்ட, ஆசி­ரியர் பணி­யி­டங்கள் உள்­ளன. ஆனால், பெரும்­பா­லான பள்­ளி­களில் 4 பணி­யிடங்­களில் மட்­டுமே, ஆசி­ரியர்கள் உள்­ளனர். தமி­ழகம் முழு­வதும், அரசு தொழிற்­ப­யிற்சி பள்­ளி­களில், 469 ஆசி­ரியர் பணி­யி­டங்கள் காலி­யாக உள்­ளன.

    இந்த நிலையில், தமி­ழ­கத்தில் புதி­தாக 5 தொழிற்­ப­யிற்சி பள்­ளிகள் தொடங்க, நிதி ஒதுக்கி, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்­சி ­து­றைக்கு, முதல்வர் ஆணை பிறப்­பித்­துள்ளார்.

    புதிய தொழிற்­ப­யிற்சி பள்­ளி­களில் உரு­வாகும் பணி­யி­டங்­ களையும் சேர்த்தால், தமி­ழ­கத்தில் மொத்தம் 569 தொழிற்­ப­யிற்சி ஆசி­ரியர் பணி­யி­டங்கள் காலி­யாக இருக்கும். வகுப்பு நடத்த ஆசி­ரி­யர்கள் பற்­றாக்­குறை உள்­ளதால், மாண­வர்­களின் கல்வி திறன் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

    இது­கு­றித்து, அரசு தொழிற் பயிற்சி பள்ளி முதல்வர் ஒருவர் கூறு­கையில், "அரசு தொழிற்­பயிற்சி பள்­ளி­களில், காலி­யாக உள்ள இள­நிலை பயிற்சி அலுவலர் பணி­யி­டங்­க­ளுக்கு, கடந்த 2000ல், அரசு வேலை வாய்ப்­பகம் மூலம், ஆட்கள் நிய­மிக்­கப்­பட்­டனர். அதன்பின், கடந்த, 13 ஆண்­டு­க­ளாக ஆசிரியர் பணி­க­ளுக்கு ஆள்­தேர்வு நடை­பெ­றா­ததால், பற்­றாக்­குறை ஏற்­பட்டு, மாணவர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். காலி பணி­யி­டங்­களை நிரப்ப, தமி­ழக அரசு நடவ­டிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

    காலிப் பணியிடங்கள்

    இது­கு­றித்து, அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்­சித்­துறை அதி­கா­ரிகள் கூறுகையில் "அரசு தொழிற்­ப­யிற்சி பள்­ளி­களில் காலி­யாக உள்ள பணியிடங்க­ளுக்கு ஆசி­ரியர் தேர்வு செய்­வது குறித்து அர­சுதான் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்," என்­றனர்.

    No comments: