Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, September 30, 2013

    அரசு ஊழியர்களுக்கு 30-ம் தேதி ஊதியம் வழங்க நடவடிக்கை

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழக்கம் போல, வரும் 30-ம் தேதி ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து மாவட்ட கருவூல அலுவலர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தடையின்றி ஊதியம் கிடைக்க மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியல்களை சரி பார்த்து, அங்கீகரிக்கப்பட்டு அந்தந்த ஸ்டேட் பாங்க் மூலம் சென்னை தேசிய அனுமதி பிரிவுக்குச்  சென்று, இறுதியாக ரிசர்வ் வங்கி மூலம் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.

    அதன்படி, கடந்த 27-ம் தேதி வரை பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அனைவருக்கும் 30-ம் தேதி ஊதியம் வழங்கப்படும். தேவையற்ற குழப்பம் அடைய வேண்டாம். இதுகுறித்து மேலும் விளக்கம் பெற விரும்புவோர்,

    கருவூல அலுவலர், மாவட்ட கருவூலம், கடலூர் என்ற முகவரியில் நேரிலோ, அல்லது 94439 48802, 90037 29874 எனற செல்போன் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

    1 comment:

    Anonymous said...

    அடகு கடைகளுக்கு ஆதங்கம்