Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, September 7, 2013

    அசத்திய மாற்றுத்திறனாளி மாணவர்கள்

    "வாழ்கை பாதையில் வெற்றி என்ற இலக்கை அடைய, ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை மனதைரியம் மிகவும் அவசியம்" என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.

    கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள, அம்ரித் சிறப்பு பள்ளியின் பொன் விழா கொண்டாட்டங்கள் நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கற்றல் திறன் குறைபாட்டு பிரிவை துவக்கி வைத்து பேசியதாவது:

    ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை, மனதைரியம் மிகவும் அவசியம். கடந்த 2003ம் ஆண்டு நான் ஜனாதிபதியாக இருந்த போது 1000 மாற்றுத்திறனாளிகளை ஒன்றாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, என் மனதில் உதித்த கவிதை "நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள், எங்கள் மனம் வைரத்தை போன்று வளமானது, எங்கள் தன்னம்பிக்கையால் எப்போதும் வெற்றி பெறுவோம், கடவுள் எங்களுடன் இருக்கையில் எதிரிகள் யாரும் இல்லை".

    தன்னம்பிக்கை, மனதைரியத்தை வளர்த்திக் கொள்ளுங்கள். மண்ணில் பிறந்த ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தன்னம்பிக்கை ஊட்டி வளர்க்கவேண்டியது நம் கடமை. இவ்வாறு கலாம் பேசினார்.

    முன்னதாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் நமது பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் மீனவர்கள் போன்றும், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கிராம வாழ்கை, தப்பாட்டம், கோலாட்டம் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதை பார்த்த கலாம் கண்கலங்கினார். மேடைக்கு சென்று மாணவர்களை பாராட்டி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    No comments: