Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, June 4, 2015

    ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் எப்போது?

    ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான நுழைவு தேர்வு முடிவு மற்றும் தரவரிசைப் பட்டியல் வரும், 18ம் தேதி வெளியாக உள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், தமிழகத்தில் அண்ணா பல்கலையின் இணைப்புக் கல்லுாரிகளில் இன்ஜினியரிங் படிக்க, அண்ணா பல்கலையில் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லுாரிகளில் சேர, ஜே.இ.இ., எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.


    இதில், இரண்டு விதமான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐ.ஐ.டி., என்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஐ.எஸ்.எம்., என்ற இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் ஆகியவற்றில் படிக்க, 'ஜே.இ.இ., அட்வான்ஸ்ட்' என்ற தேர்வை எழுத வேண்டும். இதற்கு முதலில், ஜே.இ.இ., மெயின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, மே, 24ம் தேதி முடிந்தது. தேர்வு முடிவுகள் வரும், 18ம் தேதி வெளியாகும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் தேர்ச்சி பெற்றால், நாடு முழுவதும் உள்ள, 17 ஐ.ஐ.டி., நிறுவனங்களில் ஒன்றில் படிக்க முடியும்.

    இதே போல், ஐ.ஐ.ஐ.டி., என்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, சென்னை, கிண்டியிலுள்ள சி.எப்.டி.ஐ., என்ற மத்திய காலணி உற்பத்தி பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில், பி.டெக்., - எம்.டெக்., படிப்புகளில் சேர, 'ஜே.இ.இ., மெயின்' என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளன.
    ஆனாலும், 'ஜே.இ.இ., அட்வான்ஸ்ட்' தேர்வு முடிவுக்காக, தரவரிசை பட்டியல் தயாரிப்பு தாமதமாகியுள்ளது. ஜே.இ.இ., மதிப்பெண் மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், தரவரிசைப் பட்டியல் வெளியாகும்.

    இதுகுறித்து, ஐ.ஐ.ஐ.டி., அதிகாரிகள் கூறியதாவது:தேர்வு முடிவுகள் வெளியானதும், சி.எஸ்.ஏ.பி., எனப்படும், மத்திய கல்வி நிறுவன இடங்கள் ஒதுக்கீடு வாரியத்தின் இணைய தளத்தில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படும். பின், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கில் மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்யலாம்.
    இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

    No comments: