Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, June 24, 2015

    அரசு எம்.பி.பி.எஸ்.; 1,672 மாணவர்கள் தேர்வு: காத்திருப்போர் பட்டியலில் 313 மாணவர்கள்

    சென்னையில் நடைபெற்று வரும் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர கடந்த 5 நாள்களில் மொத்தம் 1,672 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,257 எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப, ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி முதல் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கு முதல் கட்டக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன் 25) நிறைவடைகிறது.

    வேகமாக நிரம்பும் அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்: அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்துப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய அனைத்து எம்.பி.பி.எஸ். இடங்களும் கடந்த 5 நாள்களில் நிரம்பி விட்டன. 
    சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி), அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் அனைத்துப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) பிரிவு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன.
    காத்திருப்போர் பட்டியல்: கலந்தாய்வின் 5-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை, கட்-ஆஃப் மதிப்பெண் 197.00-இல் தொடங்கி 196.50 வரை எடுத்திருந்த மொத்தம் 656 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். கலந்தாய்வுக்கு 47 மாணவர்கள் வரவில்லை; இதையடுத்து கலந்தாய்வில் பங்கேற்ற 599 மாணவர்களில், 125 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தேர்வு செய்தனர். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களை 180 மாணவர்கள் தேர்வு செய்தனர். 
    சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரி பி.டி.எஸ். இடங்களை 33 மாணவர்கள் தேர்வு செய்தனர். உயர் நீதிமன்ற வழக்கு காரணமாக எந்த மாணவருக்கும் சேர்க்கைக் கடிதம் வழங்கப்படவில்லை.
    தாங்கள் விரும்பிய அரசு மருத்துவக் கல்லூயில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்காத 261 மாணவர்கள் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 313 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
    தொடரும் கலந்தாய்வு: அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 585 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 253 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 36 பி.டி.எஸ். காலியிடங்களை நிரப்ப தொடர்ந்து புதன்கிழமை (ஜூன் 24) கலந்தாய்வு நடைபெற உள்ளது. 
    பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம் வகுப்பினர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என கட்-ஆஃப் மதிப்பெண் 196.50-இல் தொடங்கி கட்-ஆஃப் மதிப்பெண் 192.00 வரை எடுத்துள்ள மாணவர்கள் புதன்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்கின்றனர்.
    345 பழைய மாணவர்களுக்கு வாய்ப்பு
    சென்னையில் நடைபெற்று வரும் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில், கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த 345 பழைய மாணவர்கள் இதுவரை தேர்வாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால், கலந்தாய்வில் தினமும் பழைய மாணவர்கள் குறித்த எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. 
    எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 23) 84 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; கடந்த 5 நாள்களில் மொத்தம் 345 பழைய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 4,679 மாணவர்களில், 548 பழைய மாணவர்களுக்கு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கணித்துள்ளனர். தொடர்ந்து புதன்கிழமை (ஜூன் 24), வியாழக்கிழமை (ஜூன் 25) ஆகிய இரண்டு நாள்கள் கலந்தாய்வு நடைùபெற உள்ளது.

    No comments: