Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, June 19, 2015

    SSTA சார்பாக அரசு உயர் அதிகாரிகள் சந்திப்பு -ஆசிரியர் பொது கலந்தாய்வு ஜூலை மாதம் ,CRC Spl Leave வழங்க மறுக்கப்படும் ஒன்றியங்கள், 3500 ஆசிரியர்களுக்கு பின்னேற்பு!!!

    16.06.2015 SSTA -வின் மாநில பொறுப்பாளர்கள் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர்,தொடக்கக் கல்வி இயக்குநர்,அரசு முதன்மை செயலாளர் நிதிதுறை,அரசு முதன்மை  செயலர் (செலவீனம் )ஆகியோர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் பற்றி பேசப்பட்டது.
    1.ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வு பற்றி கேட்கப்பட்ட போது ஜூலை மாதம் நடைபெறும் என்று அரசின் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

    2.SSTA சார்பாக ஆறு மாதமாக போராடி பெற்று தந்த (CRC பயிற்சிக்கு சிறப்பு ஈடு செய்யும் விடுப்பு) விடுப்பு பற்றியும் அதில் ஏற்படும் நடைமுறை சிக்கல் பற்றியும் (ஈடு செய் சிறப்பு விடுப்பு அரசாணை எண் -2218/81 )கல்வி துறைக்கு என்று பிறப்பிக்கப்படவில்லை அரசு ஊழியஊழியர்களுக்காக பிறப்பிக்கப்பிக்கப்பட்டது  அதில் குழப்பங்கள் உள்ளன எனவே கல்வித்துறைக்கென்று ஓர் தெளிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது இனி ஈடு செய் விடுப்பு அந்தந்த கல்வி ஆண்டில் துய்க்க வேண்டும் என கடிதம் பிறப்பிக்கப்படும் என உறுதி கூறினர்.   .ஒரு சில மாவட்டங்கள்,ஒன்றியங்களில் விடுப்பு மறுக்கப்பட்டு வருவதை பட்டியலிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஏதேனும்  ஒன்றியங்களில் விடுப்பு மறுக்கப்பட்டால் உடனே Ssta மாநில செயலரை தொடர்பு கொள்ளவும்-Phone :9843156296 ஈடுசெய் அரசாணை வாதாடி பெற்றுத்தந்த SSTA அதன் பயனை ஆசிரியர்கள் அனைவரும் பெறும் வரை ஓயாது ...
    3.உயர்கல்வி பயின்றமைக்கு பின்னேற்பு வழங்குவது குறித்து கேட்கப்பட்டது அனுமதி பெறாமல் பயின்றவர்களின் எண்ணிக்கை 3500 எனவும் அப்பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர்களுக்கு அனுமதி அரசாணை பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
    4.பின்னர் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர்(SSA-SPD)திருமதி. பூஜா குல்கர்னி அவர்களை சந்தித்துSSA பயிற்சிகளுக்கு கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக மதிப்பூதியம் ரூ.50 வழங்கப்பட்டு வருவதாகவும் அதை ரூ.200 ஆக உயர்த்தி வழங்குமாறு SSTA சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது மேலும் இந்தாண்டு நடைபெறவுள்ள CRC நாட்கள் தேதி முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என கோரிக்கை. வைக்கப்பட்டது அதை கண்டிப்பாக நிறைவேற்றுவதாகவும் மதிப்பூதியம் உயர்த்திதருவது பற்றி (அனைத்து மாநிலங்களிலும் ரூபாய் 50 மட்டுமே  வழங்கி வருவதாகவும் இதுபற்றி மத்திய சர்வ சிக்‌ஷயான் அபியான் திட்ட இயக்கத்தில் கோரிக்கை வைத்து பெற்று தர  முயற்சிப்பதாகவும்) கனிவோடு தெரிவித்தார்கள்.
    மேலும்.  விரிவாக இணையதளத்தில் பதிவு செய்யப்படும். வேடிக்கை பார்த்தால் வேதனையே மிஞ்சும் ! உண்மையாய் உணர்வாய் போராட இணையுங்கள் SSTA வில் ....சொல்வதை செய்வோம் ! செய்வதை மட்டும் சொல்வோம் ! ஊதிய விபரம் குறித்து விரைவில் பதிவிடப்படும் ...

    No comments: