Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, June 26, 2015

    ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில்; சான்றிதழ் சரிபார்ப்பு

    ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், புதுச்சேரி மாணவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று நடந்தது. ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் உள்ள 150 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, அகில இந்திய அளவில், 1லட்சத்து 37 ஆயிரத்து 738 பேர் ஆன் லைனில் விண்ணப்பித்திருந்தனர்.அதற்கான நுழைவு தேர்வு,கடந்த 7ம் தேதி நடந்தது. இதன் முடிவுகள் கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது.


    பொதுப்பிரிவினருக்கு 50 இடங்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு 28, ஆதிதிராவிடர் 16, பழங்குடியினர் (எஸ்.டி.) 11 இடங்களும், புதுச்சேரி மாணவர்களுக்கு 40, என்.ஆர்.ஐ.,மாணவர்களுக்கு 5 இடங்கள் என ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப் பட்டோருக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று முன்தினம் நடந்தது.
    தொடர்ந்து, புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட 40 இடங்களில், புதுச்சேரி பொது -23, ஓ.பி.சி.,-11, எஸ்.சி.,-6,இடங்களும், என்.ஆர்.ஐ.- 5, அகில இந்திய ஒதுக்கீட்டில் எஸ்.சி., 16, பழங்குடியினர் (எஸ்.டி.,) 11இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், 144 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
    தேர்வான மாணவர்களின் சான்றிதழ் சரி பார்க்கப்பட்டது. இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் இன்றும் நாளையும் நடக்கிறது. மாணவர்களுக்கான சேர்க்கை கடிதம் வரும் 29ம் தேதி வழங்கப்பட உள்ளது. ஜூலை 1ம் தேதி எம்.பி.பி.எஸ்., வகுப்புகள் துவக்கப்பட உள்ளது.

    No comments: