Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, June 29, 2015

    பள்ளிகளில் அலுவலக பணி செய்ய நிர்பந்தம்

    அரசு பள்ளிகளில், பாடம் நடத்துவதோடு, அனைத்து அலுவலக பணிகளிலும், ஈடுபடுத்த, நிர்பந்திக்கப்படுவதால், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புக்கான மவுசு அதிகரித்த நிலையில், அரசு பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கான ஆர்வம் அதிகரித்தது.


    ஒப்பந்தம்

    இதனால், கடந்த சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில், அதிகரித்து வந்த கம்ப்யூட்டர் பாடப்பிரிவு, தற்போது அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் வந்துவிட்டது. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்களை, சிறப்பு தேர்வுமூலம் நிரந்தரமாக்கிய நிலையில், கடந்த ஆண்டு, பி.எஸ்சி.,- -பி.எட்., படித்த ஆசிரியர்களை, சீனியாரிட்டி அடிப்படையில், கம்ப்யூட்டர் ஆசிரியராக தமிழக அரசு நியமித்தது.

    மற்ற பாட ஆசிரியர்களை போன்றே, வாரத்துக்கு, 28 பாட வேளைகள், இவர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. இத்துடன் அலுவலக பணிகள் அனைத்தும், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மீதே சுமத்தப்படுகிறது. கடந்த ஆண்டுகளில், கல்வித்துறை அலுவலகத்திலிருந்து, கடிதம் அனுப்புவது, பதில் பெறுவது, தகவல்கள் வழங்குவது, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது, பொதுத் தேர்வுக்கான பட்டியல் தயாரிப்பது, மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை பெற்றுத்தருவது, நலத்திட்ட உதவிகள் குறித்த கணக்குகள் உள்ளிட்ட அனைத்தையும், அலுவலக உதவியாளர்கள் பார்த்து வந்தனர்.ஆனால், சமீப காலமாக இந்த பணிகள் அனைத்தும், ஆன்லைன் மயமாகிவிட்டது.

    இந்த பணிகளில் தவறுகள் ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, பெரும்பாலும், அனைத்து பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் ஆசிரியர்களை கொண்டே செய்யப்படுகிறது.இதற்கு, உயர் அலுவலர்களும் நிர்பந்தம் செய்வதால், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

    கூடுதல் பணிஇதுகுறித்து கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கூறியதாவது:கடந்த காலங்களில், பெரும்பாலான பள்ளிகளில், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தது.

    இதனால், தலைமை ஆசிரியர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், ஆன்லைன் பணிகளை, பாட வேளைகளையும் பார்த்துவிட்டு, கூடுதலாக செய்து வந்தனர். ஆனால், தற்போது அனைத்து பள்ளிகளிலும், அலுவலக உதவியாளர் பணியிடங்கள்

    நிரப்பப்பட்டுவிட்டது. ஆனாலும், அலுவலக பணிகளை, கம்ப்யூட்டர் ஆசிரியர்களிடமே ஒப்படைத்து வருகின்றனர். மற்ற ஆசிரியர்களை போன்றே, அதே அளவுக்கு வகுப்புகளும் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள நேரத்திலும், பள்ளி முடிந்த பின்பும், அலுவலக பணிகளை பார்க்க வேண்டியுள்ளது.மற்ற ஆசிரியர்கள் பள்ளி முடிந்தவுடன் வீடு திரும்பும் நிலையில், நாங்கள் வீடு திரும்ப, இரவாகிவிடுகிறது.

    இப்பணிகளில் ஏதேனும் குறை வந்துவிட்டாலும், அதற்கும் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.கல்வித்துறை அலுவலகத்தில் குறைகளை தெரிவித்தாலும், &'நீங்கள் தான் செய்ய வேண்டும், மாதம், 7,000 ரூபாய் சம்பளத்துக்கு ஏராளமான ஆட்கள் உள்ளனர் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்&' என, மிரட்டல் விடுக்கின்றனர்.

    கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி மட்டுமல்ல, கணிதம், அறிவியல் உள்ளிட்ட அனைத்து பாட ஆசிரியர் பணிக்கும், மாதம், 5,000 சம்பளத்தில் கூட, ஏராளமான ஆட்கள் கிடைக்கும் நிலையில், அவர்களுக்கு இதுபோன்ற மிரட்டல் விடுக்க முடியுமா? அலுவலக உதவியாளர் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தும், கம்ப்யூட்டர் ஆசிரியர்களே செய்யும் நிலை, கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பலர் மன உளைச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    1 comment:

    Unknown said...

    நண்பரே உண்மைதான் உமது கூற்றை ஏற்கிறேன் அதே நேரத்தில் அடுத்த ஆசிரியர்களை ஒப்பிட வேண்டாம் உமது நிலைதான் எங்களதும் அலுவலகத்தில் எல்லாப்பணி இடங்களும் நிரப்பப்பட்டும் ஆசிரியர்கள் எவ்வளவு பணிகள் செய்கிறார்கள் தெரியுமா அதாவது கல்விப்பணி தவிர