Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, June 26, 2015

    புதிதாக தொடங்கப்பட்ட திருப்பதி, பாலக்காடு ஐ.ஐ.டி.க்களில் மாணவர் சேர்க்கை

    திருப்பதி, பாலக்காடு ஆகிய இடங்களில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஐஐடி-க்களில் தலா 4 துறைகளின் கீழ் மொத்தம் 120 இடங்களுக்கு, 2015-16 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது என சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறினார்.

    கடந்த 2014 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த இரு ஐஐடி-க்களில் வருகிற ஆகஸ்ட் முதல் வகுப்புகள் நடைபெற உள்ளன.
     இந்த ஐஐடி-க்களுக்கு அடுத்த 6 முதல் 10 மாதங்களில் புதிய இயக்குநர் நியமிக்கப்பட உள்ளார். 
    அதுவரை அவற்றுக்கான வழிகாட்டி இயக்குநராக சென்னை ஐஐடி இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
     இது குறித்து பாஸ்கர் ராமமூர்த்தி கூறியதாவது: 
     இந்தப் புதிய ஐஐடி-க்களுக்கு இயக்குநர்கள் நியமிக்கப்படுகிற வரை, சென்னை ஐஐடி-தான் அவற்றை வழிநடத்தும்.
     அதுவரை திருப்பதி ஐஐடி-க்கு பொறுப்பு பேராசிரியராக கே.என். சத்தியநாராயணாவும், பாலக்காடு ஐஐடி-க்கு பொறுப்பு பேராசிரியராக பி.பி.சுனில் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
     இந்த இரு ஐஐடி-க்களிலும் சிவில், கணினி அறிவியல், மின்னியல், இயந்திரவியல் ஆகிய 4 பி.டெக். துறைகளின் கீழ் தலா 30 இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
     முதல் 4 ஆண்டுகளுக்கு, அதாவது முதல் பிரிவு மாணவர்கள் படிப்பை முடிக்கும் வரை தாற்காலிக கட்டடத்தில் இயங்க உள்ள இந்த ஐஐடி-க்கள், அதற்குள் அந்தந்த மாநில அரசுகள் சார்பில் ஒதுக்கித் தரப்படும் 500 ஏக்கர் நிலத்தில் நிரந்தர வளாகங்கள் கட்டி முடிக்கப்பட்டு மாற்றப்பட்டு விடும்.
     இதுபோல் வகுப்புகளை நடத்த சென்னை ஐஐடி-யிலிருந்து ஓய்வுபெற்ற தலைசிறந்த பேராசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். பேராசிரியர்கள், ஊழியர்களுக்கான குடியிருப்புகள், மாணவ, மாணவிகளுக்கான விடுதிகள் ஆகியவையும் தயார் நிலையில் உள்ளன.
     எனவே, மாணவர்கள் வியாழக்கிழமை (ஜூன் 25) முதல் ஐஐடி-யில் சேருவதற்காக ஆன்-லைனில் படிவங்களை நிரப்பும்போது பாலக்காடு ஐஐடி, திருப்பதி ஐஐடி-க்களையும் விருப்பமாகத் தேர்வு செய்யலாம். இந்த இரு ஐஐடி-க்களிலும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கும் என்றார் அவர்.

    No comments: