Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, June 22, 2015

    அரசு எம்.பி.பி.எஸ்.: 3 நாள்களில் 1,119 மாணவர்கள் தேர்வு

    தமிழகத்தில் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வரும் எம்.பி.பி.எஸ் கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர இதுவரை மொத்தம் 1,119 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,396 எம்.பி.பி.எஸ். காலியிடங்களை நிரப்ப தொடர்ந்து வருகிற 25-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. 

     சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ்.: தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள 597 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர்களைத் தேர்வு செய்யவும் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாள்களில் மொத்தம் 30 மாணவர்கள் சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 567 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் உள்ளன.
     உயர் நீதிமன்ற வழக்கு: கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை தொடங்கவுள்ளது. இதனால் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர் எவருக்கும் சேர்க்கைக்கான கடிதம் வழங்கப்படவில்லை.
     மேலும் 8 கல்லூரிகளில்... சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் பொதுப் பிரிவினருக்கான எம்.பி.பி.எஸ். கலநதாய்வு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. 
     கலந்தாய்வுக்கு மொத்தம் 588 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். கலந்தாய்வில் 580 மாணவர்கள் பங்கேற்றனர். 8 மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. கடந்த 2 நாள்களில் மொத்தம் 16 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.
     197.50 கட்-ஆஃப் மதிப்பெண்ணுடன்...: அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 546 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர 29 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கு 198.25 கட்-ஆஃப் மதிப்பெண்ணுடன் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி, 197.50 கட்-ஆஃப் மதிப்பெண்ணுடன் முடிவடைந்தது.
     இன்று தொடர்ந்து கலந்தாய்வு: சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியைப் போன்று, சென்னை ஓமந்தூரார், மதுரை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோவை, சேலம், திருச்சி ஆகிய 8 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் அனைத்துப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய எம்.பி.பி.எஸ். இடங்களையும் மாணவர்கள் தேர்வு செய்துவிட்டனர். அனைத்துப் பிரிவு மாணவர்களைத் தேர்வு செய்ய தொடர்ந்து எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு திங்கள்கிழமையும் நடைபெறுகிறது.
    161 பழைய மாணவர்களுக்கு வாய்ப்பு
     தமிழகத்தில் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வரும் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த 161 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் யாருக்கும் சேர்க்கைக் கடிதம் வழங்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
     548 பழைய மாணவர்களுக்கு வாய்ப்பு: நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த 4,679 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 548 பேருக்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு மதிப்பிட்டுள்ளது. கடந்த 3 நாள்களாக நடைபெற்ற கலந்தாய்வில், கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த 161 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
     கடந்த ஜூன் 19-ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கான எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில், மாற்றுத் திறனாளிகள் பிரிவிலும் முந்தைய ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த சில மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுவதால், முந்தைய ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மீதமுள்ள 387 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் வகையில் தேர்வாக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    No comments: