ஐ.ஏ.எஸ். பணி
நியமனம் மற்றும் பதவி உயர்வு
உட்பட அனைத்து அரசுப் பணிகளிலும்
மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று
உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான
நீதிபதிகள் அமர்வு, 1995-ஆம் ஆண்டு மாற்றுத்
திறனாளிகள் சட்டம் தாக்கல் செய்யப்பட்டும்
19 ஆண்டுகளாக
அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள்
கிடைக்கவில்லை என்று மத்திய அரசைச்
சாடியுள்ளது.
மத்திய
அரசுக்கு ஆதரவாக ஆஜரான கூடுதல்
சொலிசிட்டர் ஜெனரல் பின்கி ஆனந்த்,
நீதிபதிகளிடத்தில் கூறும்போது, குரூப் ஏ மற்றும்
குரூப் பி அதிகாரிகள் பணிப்
பிரிவில் பதவி உயர்வு அளிக்க
முடியாது. ஏனெனில் அது நியமனம்
அல்ல என்பதினால் என்று வாதாடினார்.
நியமனம்
என்பது பரந்துபட்ட ஒரு கருத்தாக்கம். ஆனால்
மத்திய அரசு இதற்கு குறுகலான
விளக்கம் அளிக்கிறது என்று நீதிபதிகள் குழுவினர்
அவருக்கு பதிலுரைத்தனர்.
எந்தக்
காரணத்திற்காக நாடாளுமன்றத்தில் இதற்குரிய மசோதா தாக்கல் செய்யப்பட்டதோ
அதன் நோக்கம் நிறைவேறவில்லை என்று
கூறிய நீதிபதிகள், “இட ஒதுக்கீட்டுக் கொள்கையை
அரசு வெறுப்படையச் செய்து வருகிறது” என்று
சாடினர்.
1 comment:
*********************************************************
இடைநிலை ஆசிரியர்களுக்கு
அழைப்புக் கடிதம்
**********************************************************
"""""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
SGT
இடம் : சென்னை மெரினா
நாள் : 14.09.2014
நேரம்:காலை 10 மணி
மிக முக்கியமான செய்தி:
கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.
ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***
நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.
வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.
***************************
!! SUNDAY 14.09.2014 !!
!! COME TO CHENNAI !!
!! JOIN AT MERINA !!
!! DEMAND +VACCANCY !!
***************************
நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT
வரவிரும்புவோர் தொடர்பு கொள்க
95433 91234 Sathyamoorthy
9597239898
09663091690 Sathyajith
Post a Comment