Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, September 26, 2014

    5% மதிப்பெண் தளர்வு ரத்து அடுத்து என்ன நடக்கும்; தமிழக அரசின் அடுத்த நடவடிக்கை எப்படி அமையும்?

    ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இடஒதுக்கீட்டு பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்க  வழங்கப்பட்ட 5%  மதிப்பெண் தளர்வு மதுரை உயர்நீதிமன்ற கிளையால் ரத்து செய்யபட்டது. அந்த தீர்ப்பில் தற்போது தேர்வு பெற்றவர்கள் மற்றும் பணியில் உள்ளவர்கள்(அரசு உதவி பெறும் பள்ளி) வேலைபார்க்கும் 5% மதிப்பெண் தளர்வில் வேலைக்கு சேர்ந்தவர்கள் தொடர்ந்து பணியாற்றலாம். அவர்களை நீக்க வேண்டியது இல்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.


    இந்த தீர்ப்பால் 5% மதிப்பெண் தளர்வு பெற்று அரசு வேலைக்கு சென்றிருப்போருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளதால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

    அரசு 5% மதிப்பெண் தளர்வு இடஒதுக்கீடு பிரிவினருக்கு வழங்கியதை ரத்து செய்து நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய நிலையில் அடுத்த கட்டமாக இதனை உடனடியாக அரசு மேல்முறையீடு செய்யும் இல்லை என்றால் எதிர்கட்சிகள் மற்றம் சமூக நீதிக்கு குரல் கொடுப்பவர்கள் ஏன் முறையீடு செய்ய வில்லை என கேள்வி கேட்பார்கள். மேலும் தற்போது பணியில் சேர்நதுள்ளவர்களுக்கு தடைவிதிக்கும் படி நீதிமன்றத்தில் தேர்வு பெறதவர்கள் வழக்கு தொடுக்கலாம். இவை தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்தும். அதைவிட பெரியது ஒன்று உள்ளது நமது தமிழக முதல்வர் அறிவித்த 5% மதிப்பெண் தளர்வை மீண்டும் பெற்று தந்துவிடுவார் ஏன் என்றால் நாடாளுமன்ற தேர்தல் முன் அறிவித்து பிறகு இப்போது கண்டுகொள்ளவில்லை என்றால் அது நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்த 5% மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டதாக அனைவரும் நினைத்து விடுவார்கள் என தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து கண்டிப்பாக மேல் முறையீடு செய்வார்கள் இது உறுதி

       ஜெயா டிவியில் இதுவரை செய்தியில் இந்த 5% மதிப்பெண் தளர்வு ரத்து குறித்து எந்த செய்தியும் வரவில்லை எனவே இந்த தீர்ப்பு குறித்து கண்டிப்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் மற்ற மாநிலங்களில் இந்த தளர்வு கொடுத்ததை கோடிட்டு காட்டி அரசின் கொள்கை என கூறி அரசானைக்கு உயிர் கொடுப்பார்கள் என தெரிகிறது.

    1 comment:

    Unknown said...

    தகுதித்தேர்வு அறிவித்தபோதே ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டிருந்தால் இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டிறிக்காது.மாறாக தேர்வுஎழுதியபிறகு கால்ம் கடந்து வ்ழ்ங்கப்பட்டது.மேலும்,ஒரு g.o இரத்து செய்யப்படும்பொழுது அந்த தேதி முதலே அமலுக்கு வரும்.ஆனால் கல்வித்துறை இதையெல்லாம் அறிந்தும் அவசர்மாகப் பணிநியமணம் செய்துள்ளது .வியப்பைத்தருவதாக உள்ளது.உச்சநீதிமன்றம்பல வழக்குகளில் தீர்ப்பு வழங்க்கியுள்ளது.மேல் முறையீடு செய்யும்பொழுது ஆசிரியர்கள் பாதிப்படையவாய்ப்புகள் உள்ளதை கல்வித்துறை கவனத்தில் எடுத்ததாகத்தெரியவில்லை.அவசரமுடிவு ,பணிநியமனம் பெற்றவர்களின் எதிகால்ம் என்ன?