காஞ்சிபுரம் மாவட்டத்தில், நாளை முதல் துவங்கும் எட்டு, பத்து, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான தனித்தேர்வுகளின் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் எட்டு, பத்து, பிளஸ் 2 வகுப்புகளின் தனித்தேர்வு நாளை முதல் துவங்குகிறது. இந்த தேர்விற்கு ஏற்கனவே ஆன் - லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். எட்டாம் வகுப்புத் தேர்வு 30ம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வு, அக்டோபர் 4ம் தேதியும், பிளஸ் 2 தேர்வு, 9ம் தேதியும் முடிவடைகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனித் தேர்விற்கான தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வகுப்பு தேர்வு மையம்
எட்டு - கா.மு.சுப்புராய முதலியார் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.
பத்து - பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம், ராமகிருஷ்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு.
பிளஸ் 2 - அந்திரசன் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம், ஜெய் கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு.
No comments:
Post a Comment