
அத்துடன் அவர்களுக்கு விதிக்கப்படும் சிறை தண்டனை காலமும் சேர்த்து கணக்கிடப்படும். ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால் அவர் மொத்தம் 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்நிலையில் இன்று சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் காலை பெங்களூர் புறப்பட்டு சென்றுள்ளனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க சென்றனர். அவர்கள் அடுத்த முதல்-அமைச்சர் மற்றும் அரசு நடவடிக்கை குறித்து ஜெயலலிதாவிடம் ஆலோசனை நடத்துவார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால் அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க ஷீலா பாலகிருஷ்ணனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. . விடுமுறை நாள் என்பதால் இதுவரை ஜெயலலிதாவை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அக்ரஹாரா சிறைமுன் கடந்த 4 மணி நேரமாக ஷீலா பாலகிருஷ்ணன் காத்திருக்கிறார். ஷீலா பாலகிருஷ்ணனனுடன் சென்ற வெங்கடராமன் உள்ளிட்ட அதிகாரிகளும் காத்திருக்கின்றனர். ஜெயலலிதாவை சந்திக்க சிறப்பு அனுமதி கேட்டு சிறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை சந்திக்க சென்ற அமைச்சர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment