Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, August 18, 2014

    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் சொந்த செலவில் ஐ.டி. கார்டு

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆ.குரும்பப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இப்பகுதியை சுற்றியுள்ள காளைகவுண்டம்பட்டி, ஆலத்தூர், களத்துப்பட்டி, குரும்பப்பட்டி, குரும்பப்பட்டி காலனி, புங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 103 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
    இந்த பள்ளிக்கு செல்ல போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை. இங்கு ஒரு தலைமை ஆசிரியர், 6 உதவி ஆசிரியர்கள் உள்ளனர். இங்கு உதவிஆசிரியராக இருக்கும் கேசவன் முயற்சியால் இப்பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தனியார் பள்ளியில் வழங்கப்படுவது போல் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 

    இந்த அடையாள அட்டைகளை இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளே தயாரித்துள்ளனர். ஆசிரியர் கேசவன் கூறியதாவது: அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளி மாணவர்களை பார்க்கும்போது மனதளவில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்குகிறது. இதைப்போக்கும் விதமாக முதற்கட்டமாக, தனியார் பள்ளிகளை போல் இவர்களுக்கும் அடையாள அட்டை தயாரித்து வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதுவும் மாணவ, மாணவிகளை கொண்டே இந்த அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் இதற்கு ரூ.100 வசூல் செய்யும் நிலையில், எங்களுக்கு ஒரு அட்டை தயாரிக்க ரூ.10 மட்டுமே செலவானது. 

    இதே பள்ளியில் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சரோஜினி கஸ்தூரிராஜாவை கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து பல அரசு பள்ளிகள் மூடுவிழா காணும் நிலையில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் சொந்த செலவில் அடையாள அட்டை வழங்கியுள்ளதை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

    2 comments:

    Unknown said...

    congratulation kesavan sir

    Anonymous said...

    Good ... Best teacher...ARIVARASU