Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, August 16, 2014

    பல்கலைகள் பட்டியலை அரசு அப்டேட் செய்யாததால் பதவி உயர்வு பெற முடியாத நிலை

    அங்கீகாரம் பெற்ற பல்கலைகள் பட்டியலை, அரசு, அப்டேட் செய்யாததால், சுகாதாரத் துறையில், 200க்கும் மேலான ஆய்வக உதவியாளர்கள், தகுதி இருந்தும், ஐந்து ஆண்டுகளாக பதவி உயர்வு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


    தமிழக சுகாதாரத் துறையில், ஏராளமானோர் ஆய்வக மேற்பார்வையாளர், மருத்துவம் சாரா உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். எம்.எஸ்சி., பயோ கெமிஸ்ட்ரி படித்தவர்கள், பயோ கெமிஸ்ட் உயிர் வேதியியலாளராக பதவி உயர்வு பெறுவர்.

    தகுதியிருந்தும், அரசின் கவனக்குறைவால், ஐந்து ஆண்டுகளாக, 200க்கும் மேற்பட்டோர், பதவி உயர்வு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்கலை மானியக்குழுவின் அங்கீகாரம் கிடைத்தும், 1991 முதல், மாநில அரசு பட்டியலை, அப்டேட் செய்யாததுதான் பிரச்னைக்கு காரணம் என, ஊழியர்கள் புலம்புகின்றனர்.

    தமிழ்நாடு மருத்துவம் சாரா பட்டாதாரிகள் சங்க பொதுச் செயலர் சக்திவேலு கூறியதாவது: பல்கலை மானியக்குழு அங்கீகார பட்டியல், அவ்வப்போது மாநில அரசு பட்டியலில், அப்டேட் செய்யப்பட வேண்டும். ஆனால், 1991க்கு பின் அப்டேட் செய்யப்படவில்லை. அரசின் சில பல்கலைகள், வினாயகா மிஷன் உள்ளிட்ட பல நிகர்நிலை பல்கலையின் பெயர்களும், மாநில அரசின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

    இதனால், பட்டியலில் பெயர் இல்லை எனக் கூறி, பயோ கெமிஸ்ட் பதவி உயர்வுக்கு எங்களை சேர்க்க மறுத்து விட்டனர். ஐந்து ஆண்டுகளாக போராடி வருகிறோம். கோர்ட்டில் அனுமதி பெற்றும் கூட, அரசு கண்டு கொள்ளவில்லை. சமீபத்தில், பட்டியலை புதுப்பித்ததாக கூறும் அதிகாரிகள், எங்களை கருத்தில் கொள்ளவில்லை என்றார்.

    சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சமீபத்தில், பல்கலை மானிக்குழு அங்கீகாரம் அளித்தும், சேர்க்கப்படாமல் இருந்த பல்கலைகளின் பட்டியல், மாநில அரசின் பட்டியலில் சேர்த்து, புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு சிக்கல்கள் தீரும்" என்றார்.

    No comments: