இன்று 20.07.2014 தஞ்சாவூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருவோண திருமண மண்டபத்தில், தமிழ்நாடு அனைத்து வளமையான ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் தஞ்சாவூர் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டார்கள் .
தீர்மானங்கள்
1.ஆசிரியர் பயிற்றுநர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி செய்யக்கூடாது என்ற ஆணையை உடனே இரத்து செய்யகோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2.அரசாணை எண் 137 ன்படி அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் மாறுதல் நெறிமுறைகள் உள்ளடக்கியதென்பதால் ஆசிரியர் பயிற்றுநர்களை மட்டும் கட்டாயமாக ஒட்டு மொத்தமாக 4587 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் மாறுதல் அளித்திருந்தது விதிக்கு புறம்பானது என்பதை அரசுக்கு தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
3.ஆசிரியர் பயிர்றுநர்களும் அவர்களது குடும்பங்களும் கட்டாய பணிமாறுதல்கள் காரணத்தினால் மனித உளைச்சலுக்கும், குடும்பத்தின் ஸ்திர தன்மைக்கு குந்தகம் ஏற்பட்டுள்ள நிலையும் உள்ளதை அரசுக்கும் தெரிவிக்கும் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
1 comment:
இடைநிலை ஆசிரியர்களுக்கான
வெய்டெஜ் மதிப்பெண் அடுத்த வாரம்
வெளியிடப்பட
லாம்..டி.ஆர்.பி detail http://
www.theinbornteachers.blogspot.in/
Post a Comment