முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதி இறுதி பட்டியல் வரும் என்று அனைவரும் காத்திருந்த நேரத்தில் தமிழ் பாடத்தில் ஏற்பட்ட தவறினால் தமிழ் ஆசிரியர்கள் மட்டும் பணியில் சேர்ந்தார்கள்.
இன்று வரை மாதம் பல ஆனாலும் இறுதி பட்டியல் வராததால் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வெறுப்பின் எல்லையில் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்கள்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எத்தகைய நிலையில் உள்ளனரோ அதே நிலைக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்று எழுதிய நண்பர்களும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
தாள் ஒன்று எழுதியவர்களின் நிலையை தெரிந்து கொண்ட சில பத்திரிகைகள் தங்கள் வியாபாரத்தில் லாபம் சம்பாதிக்க தவறான தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
முகநூலிருந்து ராப் ராகேஷ்
No comments:
Post a Comment