Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, July 11, 2014

    எக்காரணம் கொண்டும் பழுதடைந்த கட்டடங்களில் வகுப்பறை கூடாது - சுற்றறிக்கை அனுப்ப முடிவு

    பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களில், எக்காரணம் கொண்டும் வகுப்பறை நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி, தலைமையாசிரியர்களுக்கு மறு சுற்றறிக்கை அனுப்ப, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கோவை மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், சுற்றுச்சுவர் விரிசல், பழுதடைந்த பள்ளிக்கட்டட கூரை என, சேதமடைந்த நிலையில் மறு சீரமைப்பு செய்வதற்காக, பல பள்ளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த பள்ளிக் கட்டடங்களை சீரமைப்பு செய்ய, பொதுப் பணித்துறைக்கு, பட்டியல் அளித்து, ஆறு மாதங்களாகியும் எவ்வித முதற்கட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, மழைக்காலம் துவங்கிவிட்டதால், பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக வாய்ப்புள்ளது.

    இதை அறிவுறுத்தி, பள்ளிக்கல்வித்துறை சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இருப்பினும், சில பள்ளிகளில், போதிய வகுப்பறை இன்மை உள்ளிட்ட காரணங்களால், பழைய கட்டடங்களிலேயே வகுப்பறை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.

    முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறுகையில், "பழுதடைந்த பள்ளி கட்டடங்களில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, வகுப்பறை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது, மழைக்காலம் துவங்கிவிட்டதால், மீண்டும் எச்சரித்து சுற்றறிக்கை அனுப்பப்படும். தவிர, வகுப்பறை பற்றாக்குறை இருப்பின், உரிய பள்ளிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்படும்" என்றார்.

    No comments: