தனியார் பள்ளிக்கு இணையாக மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஐ.டி. கார்டு கல்வி வளர்ச்சி நாளில் வழங்கப்பட உள்ளது. ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. 89 மாணவர்கள், 69 மாணவிகள் என மொத்தம் 158 பேர் படிக்கின்றனர். மாணவர்களின் கல்வி, ஒழுக்கம், செயல்பாடுகளை பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் விதமாக தனியார் பள்ளிகளுக்கு இணையாக கடந்தாண்டு இப்பள்ளியில் "டைரி" முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இது பெற்றோர்கள், கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றது. இரண்டாவது ஆண்டாக இம்முறையும் "டைரி" வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல் மாணவ மாணவியருக்கு இலவசமாக சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தனியார் ஸ்பான்சர்கள் சீருடை, டைரி ஆகியவற்றை மாணவ மாணவியருக்கு வழங்க பொருட்கள் தயார் செய்துள்ளனர். இந்நிலையில் முதன் முறையாக வேறு எந்த அரசு பள்ளிகளிலும் இல்லாத வகையில் மாணவ மாணவியருக்கும் ஐ.டி. கார்டு வழங்க திட்டமிடப்பட்டது. 158 பேருக்கும் ஐ.டி. கார்டு வழங்குவதற்கு ஆகும் செலவை ஏற்று கொள்ள தனியார் ஸ்பான்சர் ஒத்து கொண்டார்.
இதையடுத்து மாணவ மாணவியருக்கு வழங்குவதற்காக ஐ.டி. கார்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. கல்வி வளர்ச்சி தினமான 15ம் தேதி டைரி, சீருடை, ஐ.டி. கார்டுகள் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு அத்தியாவசியான பொருட்கள் வழங்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
3 comments:
jpUr;rp khtl;lk;> njhl;bak; xd;wpak;> ghyrKj;jpuk; Cuhl;rp xd;wpa Jtf;fg; gs;spapy; ,e;j rhjidia vy;yhk; vg;gNth nra;Jl;lhq;f…
திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியம்ää பாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இந்த சாதனையை எல்லாம் எப்பவோ செய்துட்டாங்க…
kanchipuram dt, edayarpakkam village , p.u.p. school. we did this for the last 4 years. and from the last year we gave tie and belt for the students. ofcourse diary will be issued from this year on independence day. plz don't say as first time. many schools already did this
Post a Comment