Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, July 11, 2014

    முதன்மை பத்திரிகை ஆசிரியராக திகழும் இளம் பள்ளி மாணவர்!

    வெறும் 16 வயதில், ஒரு பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக திகழ்ந்து, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் 11ம் வகுப்பு படிக்கும் டில்லி மாணவர் சகில் பன்சால்.

    Inkspire என்ற பெயருடைய ஒரு கலைப் பத்திரிகையின்(art magazine) முதன்மை ஆசிரியராக அந்த மாணவர் திகழ்கிறார். "படைப்புத்திறன் பெற்றவர்கள், தங்களின் திறமையை வெளிக்காட்டுவதற்கான ஒரு களம்தான் இந்தப் பத்திரிகை" என்கிறார் அந்த மாணவர். இவர் டில்லியின் பப்ளிக் ஸ்கூலில் படிக்கிறார்.

    இவரின் சாதனையைப் பாராட்டி, CBSE தலைவர் வினித் ஜோஷி, ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளார்.

    Inkspire பத்திரிகை குழுவில், ஏற்கனவே 600 பேர் இணைக்கப்பட்டுள்ளார்கள். போட்டோகிராபர்கள், கிராபிக் டிசைனர்கள் மற்றும் Musicians போன்ற பணி நிலைகள் அவற்றுள் அடக்கம். "சோசியல் மீடியாவை நான் பிரபலப்படுத்துவதற்காக பயன்படுத்துவேன்" என்று சகில் பன்சால் கூறுகிறார்.

    2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் Inkspire என்ற பெயரில் ஒரு facebook page தொடங்கப்பட்டது. பின்னர் அது சட்டப்பூர்வமாக்கப்பட்டது.

    உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கலைஞர்களை Inkspire ஈர்த்ததாலும், பலர் பன்சாலை அணுகியதாலும், தற்போது, Inkspire, பத்திரிகையாக வெளிவந்துள்ளது.

    No comments: