Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, July 22, 2014

    அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது மாணவர்கள் புகார்

    சிவகங்கை, எஸ்.புதூர் அருகே தர்மபட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் இரு கோஷ்டியாக செயல்படுவதால் கல்வி பாதிக்கப்படுகிறது" என கலெக்டர் ராஜாராமனிடம் மாணவர்கள் புகார் அளித்தனர். இதை மறுத்த ஆசிரியர்கள், பள்ளி கட்டடப் பணிகளில் முறைகேடு நடந்ததாக புகார் தெரிவித்தனர்.


    எஸ். புதூர் தர்மபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. தர்மபட்டி, அண்ணாவிபட்டி, அதிகாரம், கோனாம்பட்டில் இருந்து 92 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட ஆறு ஆசிரியர்கள் உள்ளனர். நேற்று காலை "இலவச பாடப்புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை" எனக்கூறி அப்பள்ளி மேலாண்மை குழு தலைவர் அம்சவள்ளி, ஊராட்சி தலைவர் காந்திமதி தலைமையில் வந்த மாணவர்கள் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

    மாணவர்களிடம் கலெக்டர் விசாரித்தார். அப்போது சில மாணவர்கள், "எங்களுக்கு நலத்திட்டங்கள் தாமதமாக கிடைத்தது. ஆசிரியர்களுக்குள் ஈகோ நிலவுகிறது; சரியாக பாடம் நடத்துவதில்லை. அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை" என தெரிவித்தனர்.

    மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ரவிக்குமாரை அழைத்த கலெக்டர், புகாரை விசாரித்து பிரச்னைக்கு உரிய ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார்.

    இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், "அனைவருக்கும் கல்வி நிதி 10.5 லட்ச ரூபாயில் மூன்று வகுப்பறைகள் கட்டினர். கட்டி ஆறு மாதங்களில் சேதமடைந்து விட்டது. கட்டுமான பணி செய்தவர்கள் இதற்கான பில்லையும் தரவில்லை. பள்ளிக்குழு கூட்ட தீர்மானத்தில் இதை கண்டித்தோம். இதனால் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது பிரச்னைகளை கிளப்பி விடுகின்றனர். எங்களுக்குள் ஈகோ&' இல்லை" என்றனர்.

    No comments: